நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Be Careful: கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து A படங்களை பார்த்த வினோத நபர் யார் தெரியுமா?

 கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து அதில் A படங்களை பார்த்த வினோத நபர்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் தானே?


மனிதனுக்கு விருப்பங்கள் என்பது ஒரு அளவுடன் இருந்தால் பரவாயில்லை. அளவை மீறினால் தான் எதுவும் சிக்கலாக மாறுகிறது.

மது அருந்துவது, புகைபிடிப்பது, பாலியல் விருப்பங்கள், ’ஏ’ படங்களைப் பார்ப்பது மட்டுமா மனிதனுக்கு போதையைத் தருகிறது? ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீதான அதீத ஆசை, மோகம் என்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

விளையாட்டுகள், உணவு, பானங்கள், ஒரு குறிப்பிட்ட நாடகத் தொடரைப் பார்ப்பது, மெகா சீரியல் மோகம் என பல விஷயங்கள் மக்களுக்கு மோசமான போதையைக் கொடுக்கலாம். 

சில சமயங்களில் இந்த ஆசைகள் ஒரு குறிப்பிட்ட செலவிற்குள் அடங்கிவிடும். இருந்தாலும், எதையும் அளவுடன் வைத்துக் கொள்வது நல்லது என்று சொல்லப்படுகிறது.

ஏதாவது ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அதில் இருந்து மீண்டு வெளிவர முயற்சிச் செய்யுங்கள்.

ஒரு ஆவண நிறுவனத்தில் தயாரிப்பாளர் மார்க் ஜோஹன் தனது அதீத விருப்பத்திற்காக நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாய் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உள்ளூர் நாளிதழின் அறிக்கையின்படி, மார்க் தனது கடன் அட்டையைப் பயன்படுத்தி ’ஏ’ படங்களைப் பார்த்ததற்காக அவரது நிறுவனத்தால் கண்டித்தது. அதுமட்டுமல்ல, நிறுவனம் மார்க் மீது மோசடி வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தது. 

2019 அக்டோபர் மற்றும் 2020 நவம்பர் மாதத்திற்கு இடையில் கிராய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு, லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

மோசடி நடந்த 2019ஆம் ஆண்டுவாக்கில் மார்க் நிறுவனத்தின் தளவாடத் துறையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, நிறுவனத்தில் அவர் பணிபுரிந்த துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் அவருக்கு கடன் அட்டையை கொடுத்திருந்தது.

நிறுவனத்தின் கடன் அட்டையை தனது சுய ஆசையை பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொண்டார்.  நிறுவனத்தின் கடன் அட்டையை பயன்படுத்தி ஆன்லைனில் வயது வந்தோருக்கான ’ஏ’ படங்களை பார்க்க பயன்படுத்தினார்.

நிறுவனத்தில் கணக்கு தணிக்கை நடைபெற்றபோது, ஒரு கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை. அந்த ஒரு கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை என்ற நிலையில், நிறுவனத்தின் உள் விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையில் மார்க் தனது மோசடியை ஒப்புக்கொண்டு 2020 இல் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. மார்க்கின் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.



also read : இன்ஸ்டாகிராமில் ஜோதிகா என்ட்ரி: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!