நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரூ.25 லட்சம் மதிப்புள்ள உணவின் மீது இருமிய பெண் - அடுத்து நடந்த பரிதாபம்?

பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பெண், கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க மறுத்த காரணத்திற்காக கடினமான தண்டனையை அனுபவித்து வருகிறார்.
கொரோனா தொற்றுநோய் பாதிப்பு இன்னும் உலகளவில் பரவி வருவதால், பாதுகாப்பு என்பது இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது. மேலும் உலகம் மீண்டும் வைரஸின் கோபத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளின் உச்சத்தையும் சந்திக்க நேரிடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே மக்கள் முகக்கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் இல்லை என்று சொல்லும் ஒருசில எதிர்ப்பாளர்கள் கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மருத்துவ நிபுணர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளனர். இந்த கோவிட் எதிர்ப்பாளர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சமூக தொலைதூர விதிகளை மீறி, அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர்.

பல தனிநபர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியில் சில அதிர்ச்சியூட்டும் செயல்களையும் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கொரோனாவால் உலகம் முழுவதும் கடந்த 18 மாதங்களாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதங்களை பார்த்த பிறகும், கோவிட் விதிகளை மீறும் நபர்களின் பல வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வெளிவருகின்றன. இருப்பினும், இத்தகைய விதி மீறல்களைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் வகுத்துள்ளன. அதன்படி, பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பெண், கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க மறுத்த காரணத்திற்காக கடினமான தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இதன் மூலம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் கற்றுக்கொண்டார். ஏனெனில் அவருக்கு தற்போது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. NBC செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கோவிட் எதிர்ப்பாளர்களில் ஒருவரான அந்தப் பெண், ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து வேண்டுமென்றே உணவின் மீது இருமியுள்ளார். மேலும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பெண் இருமிய உணவு $ 35,000 (ரூ. 25 லட்சம்) அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது என்றும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியூட்டும் அந்த சம்பவத்தில், மார்கரெட் ஆன் சிர்கோ என்று அழைக்கப்படும் அந்த பெண் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த உணவின் மீது இருமியது மட்டுமல்லாமல் அதில் துப்பவும் செய்தார். கடையில் உள்ள உணவுப் பொருட்களை மாசுபடுத்தியதோடு, சிர்கோ தான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் மார்க்கெட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்படப் போவதாகவும் கத்தியுள்ளார். இறுதியாக அந்த பெண் போலீஸ்காரர்களால் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, 37 வயதான அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதியானது.

அவரிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தின் போது தான் குடிபோதையில் இருந்ததாக கூறி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது மன்னிப்பு என்னவோ ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவரால் இரண்டு வருட சிறைத்தண்டனையிலிருந்து மட்டும் தப்பிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து விடுதலைக்கு பின்னர் 8 ஆண்டுகள் தகுதிகாண் லிஸ்டில் இருப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதவிர அந்தப் பெண் சூப்பர் மார்க்கெட்டுக்கு $ 30,000 அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!