நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்

 ஒருபுறம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவினால், மறுபுறம் தடுப்பூசி மருந்து வீணாவது கவலையளிக்கிறது. இந்த கவலையை தீர்க்க தாய்லாந்து நிபுணர்கள் ரோபோ கையை உருவாக்கியுள்ளனர்  .


கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து உலகம் சிறிது சிறிதாக மீண்டு வருவதற்கு, கோவிட் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டது ஒரு மிகப் பெரிய மைல்கல் ஆகும். தற்போது அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி ஒவ்வொரு நாடும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

ஒருபுறம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவினால், மறுபுறம் தடுப்பூசி மருந்து வீணாவது கவலையளிக்கிறது. இந்த கவலையை தீர்க்க தாய்லாந்து நிபுணர்கள் ரோபோ கையை (robotic arm) உருவாக்கியுள்ளனர்.

மூன்றாம் உலக நாடுகள் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட போதுமான அளவு மருந்தைப் பெறவே போராடும் நிலையில், மருந்துகளை வீணடிக்காமல் அவற்றை மிகவும் திறம்பட பயன்படுத்த ஒரு யோசனையைக் கொண்டு வந்துள்ளது தாய்லாந்து.

பயன்படுத்தக்கூடிய தடுப்பூசிகளின் மருந்து குப்பிகளை வீணடிப்பது தொடர்பாக உலகெங்கிலும் வரும் தகவல்கள் கவலையை அதிகரிக்கச் செய்கின்றன. இருப்பினும், தாய்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் தடுப்பூசி மருந்துக் குப்பியின் ஒரு சொட்டு மருந்து கூட வீணாகாமல் பாதுகாக்க முடியும்.  

"ஆட்டோவாக்" (AutoVacc) என்று அழைக்கப்படும் ஒரு ரோபோ கை, ஒரு குப்பியில் இருந்து வெறும் நான்கு நிமிடங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் கிட்டத்தட்ட 12 டோஸ்களை எடுத்துவிடும். இந்த இயந்திரம் தாய்லாந்தில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலைக்கழக (Chulalongkorn University) ஆராய்ச்சியாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது.

வழக்கமாக, ஒரு மருத்துவ நிபுணர் ஒரு குப்பியில் இருந்து 10 டோஸ் வரை மருந்தை எடுக்கலாம். ஆனால் இந்த AutoVacc ரோபோ கை வழக்கமான நடைமுறையில் இருந்து கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிக மருந்தை எடுக்கும்.

"ஒவ்வொரு தடுப்பூசி குப்பியிலிருந்தும் 12 டோஸ் வரை AutoVacc மருந்தை எடுக்குக்ம். எனவே கூடுதலாக 20% மருந்தைப் பெறுவதற்குக் இந்த இயந்திரம் உத்தரவாதம் அளிக்கிறது" என்று பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி மையத்தின் (Biomedical Engineering Research Center) முன்னணி ஆராய்ச்சியாளர் ஜுத்தமாஸ் ரதனவர்போர்ன் கூறினார்.

"பொதுவாக 1 மில்லியன் மக்களுக்கு அஸ்ட்ராஜெனெகா மருந்தை திட்டமிட்டால், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது, 1.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட முடியும்" என்று அவர் கூறுகிறார்.

ரோபோ கை மருத்துவ நிபுணர்களின் உடல் உழைப்பைச் குறைக்கவும் உதவுகிறது. "சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சோர்வாக இருக்கும்போது, மனிதப் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன, எனவே இயந்திரங்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று ரத்தினவர்போர்ன் (Ratanavaraporn) விளக்கினார்.

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு (Delta variant) காரணமாக தாய்லாந்தில் கோவிட் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் கோவிட் மூன்றாம் அலையும் வந்தால், அதை சமாளிக்க இந்த செயற்கை கை உதவியாக இருக்கும்.  

கோவிட் பாதிப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக முன்பு தாய்லாந்து உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றது. ஆனால் அந்நாட்டில் தடுப்பூசி போடும் விகிதம் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

இப்போது இந்த இயந்திரக் கை தாய்லாந்துக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசியை வீணடிக்காமல், முழுமையாக பயன்படுத்த உதவியாக இருக்கும்.


ALSO READ : 

சைவ உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் 4 நன்மைகள்…

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!