நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூந்தல் சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும்.
கூந்தலின் தோற்றப்பொலிவு, அதன் மிருதுத் தன்மை, அடர்த்தி போன்றவற்றை கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்துவிடலாம். கண்ணாடி முன்பு சில நிமிடங்கள் நின்று தலைமுடியை பரிசோதித்தாலே சிலவிதமான நோய்பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம்.

* தலைமுடிக்கு ‘ஹேர் டை’ பூசினாலோ, குளோரின் கலந்த நீரில் நீச்சல் அடித்தாலோ கூந்தல் உலர்ந்துவிடக்கூடும். முடி வறட்சி, பொலிவின்றி மெலிந்து காணப்படுவது போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.

* வறண்ட சருமம், தோல் அழற்சி, தலையில் அரிப்பு போன்றவை காரணமாக பொடுகு தொல்லை தோன்றும். மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நரம்பியல் கோளாறு போன்றவைகளாலும் பொடுகு ஏற்படும்.

* தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும்.

* சரும அழற்சி ஏற்பட்டிருந்தால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது, திட்டுக்கள் தோன்றுவது, மஞ்சள் நிறத்தில் செதில்கள் தென்படுவது போன்றவை தோன்றும்.

* தலைமுடி நரைப்பதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. இருப்பினும் மன அழுத்தம், எதிர்பாராத அதிர்ச்சி போன்றவற்றால் சிலருக்கு தலைமுடி நரைக்கும். மன அழுத்தத்தால் நிறமிகளை உருவாக்கும் செல்கள் பாதிப்படையும். அதனால் விரைவாகவே தலைமுடி நரைக்க தொடங்கிவிடும்.

* கூந்தலுக்கு ரசாயன சிகிச்சை மேற்கொள்வது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசுவது, கூந்தலை சூடுபடுத்துவது போன்ற செயல்களும் முடிகள் உடைவதற்கு வழிவகுக்கும். முடி உதிர்வுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. சிலருக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கும். அத்தகைய பாதிப்பு நேர்ந்தால் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!