தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பாசமாக முத்தமிட்ட ஒராங்குட்டான் குட்டி - மனதை கவரும் வீடியோ!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
நவோமி ஒரு நர்சிங் உதவியாளர் ஆவார். அவருடைய வருங்கால கணவர் துணைப் பணியாளராக இருக்கிறார்.
இங்கிலாந்தில் அமைத்துள்ள ஒரு வனவிலங்கு பூங்காவை பார்வையிட வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கண்ணாடி சுவர் வழியாக ஒரு குழந்தை ஒராங்குட்டான் மீண்டும் மீண்டும் முத்தமிட்ட சம்பவம் மனதை நெகிழவைக்கப்பதாக உள்ளது. இந்த செயலால் மனம் குளிர்ந்து போன கர்ப்பிணி தாய் கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள க்ளூசெஸ்டர் நகரில் வசிப்பவர் தான் நவோமி டேவிஸ் என்கிற பெண்மணி.
இவருக்கு தற்போது வயது 34. இவர் லெய்செஸ்டர்ஷையரில் உள்ள ட்வைக்ராஸ் வனவிலங்கு பூங்காவிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய விசிட் அவரை உணர்ச்சிவசப்படுத்தியது. வருங்கால கணவர் பென் பில்லிங்காமுடன் கடந்த 2019ம் ஆண்டு அந்த பூங்காவிற்கு நவோமி சென்றபோது , ஒராங்குட்டான் அடைத்துவைக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு, கண்ணாடி திரைக்கு அருகில் இருந்த ஒரு குரங்கிற்கு எதிராக நின்று கொண்டார். அப்போது ஒரு குட்டி ஒராங்குட்டான் குரங்கு வயது முதிர்ந்த குரங்கின் முதுகில் ஏறி கண்ணாடி கதவு வழியாக அவரது வயிற்றில் முத்தமிட ஆரம்பித்தபோது நவோமி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இது தொடர்பாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் நடந்தபோது நவோமி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை ஒராங்குட்டானுக்கு கர்ப்பிணியின் பேபி பம்ப்-ஐ வெளிப்படுத்த வேண்டும் என நவோமியின் வருங்கால கணவர் ஊக்குவித்தார்.
நவோமி ஒரு நர்சிங் உதவியாளர் ஆவார். அவருடைய வருங்கால கணவர் துணைப் பணியாளராக இருக்கிறார். நவோமியின் பம்ப் மிகவும் சிறியதாக இருந்ததால், குழந்தை ஒராங்குட்டானுக்கு தனது கர்ப்பம் பற்றி தெரியாது என்று முதலில் நினைத்து கொண்டிருந்ததாக நவோமி கூறினார். பின்னர் குட்டி குரங்கு முத்தமிட்டதை கண்டவுடன் நெகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்தாவது, "ஒராங்குட்டான் கர்ப்பத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் குட்டி குரங்கு என் பம்பை முத்தமிடத் தொடங்கியது. அது மிகவும் அழகாக இருந்தது. அந்த சமயத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், ” என்று டெய்லி மெயில் பத்திரிகையிடம் நவோமி கூறியதாக குறிப்பிட்டுள்ளது. அவளது காதலன் பென் அந்த அழகான தருணத்தை தன் கேமராவில் படம் பிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ மற்ற நெட்டிசன்களையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் பலரின் இதயத்தை வென்று வருகிறது.
இந்த சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்துள்ளது. நவோமி தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாக உள்ளார். அந்த குழந்தைக்கு கான்ஸ்டன்ஸ் என்றும் பெயர் வைத்துள்ளார். ஒராங்குட்டனுடன் சரியான சந்திப்புக்காக தனது மகள் கான்ஸ்டன்ஸை, ட்வைக்ராஸ் வனவிலங்கு பூங்காவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் நவோமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "நாங்கள் எப்போதும் அந்த வனவிலங்கு பூங்காவை விரும்புகிறோம்.
ஆனால் ஒராங்குட்டான்கள் மீண்டும் வருவார்களா, அவர்கள் கான்ஸ்டன்ஸை அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று பார்க்க விரும்புகிறேன்" என மன நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். ஒராங்குட்டான்கள் அவற்றின் சிவப்பு ரோமங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.
அவை பொதுவாக பெரிய அளவில் தோற்றமளிக்கக்கூடிய விலங்குகள். ஆவை ஆக்ரோஷமான விலங்குகள் என்றாலும், நாம் எந்த தொந்தரவும் கொடுக்காத வரை அவை நட்பாக இருக்கும். அவை மிகவும் புத்திசாலிகள் மற்றும் பகுத்தறிவும், சிந்திக்கும் திறனும் கொண்டவர்கள் ஆவர்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment