நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கிரீன்லாந்துக்கு வடக்கே உலகின் வடகோடி தீவு: வடதுருவம் அருகே கண்டுபிடித்த டென்மார்க் - சுவிட்சர்லாந்து அறிவியல் ஆய்வுக்குழு

கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுவரை உலகிலேயே மிகவும் வட கோடியில் இருக்கும் தீவு என்று நம்பப்பட்ட ஊடாக் தீவில் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஜூலை மாதம் அறிவியலாளர்கள் இந்தத் தீவைச் சென்றடைந்தனர். ஊடாக் தீவு 1978இல் கண்டறியப்பட்டது.

ஆனால் அந்தத் தீவுக்குச் சென்று திரும்பிய பின்பு தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய ஆர்டிக் தீவுகளின் நிலையை பதிவு செய்வதற்கான பொறுப்பில் உள்ள டென்மார்க் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சென்ற தீவு, ஊடாக் தீவிலிருந்து மேலும் 800 மீட்டர் வடக்கே இருப்பது தெரியவந்தது.

60 X 30 மீட்டர் அளவுள்ள இந்தத் தீவுதான் வட துருவத்துக்கு மிகவும் அருகிலுள்ள நிலப்பகுதி என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுபாட்டில் உள்ள சுயாதீன ஆர்டிக் பிரதேசமாகும்.

"நான் ஒருங்கிணைக்கும் டென்மார்க் - சுவிட்சர்லாந்து கூட்டு அறிவியல் ஆராய்ச்சியின் போது இந்தத் தீவு கண்டறியப்பட்டது," என்று ஆர்டிக் ஸ்டேஷன் இன் கிரீன்லாந்து எனும் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நிலையத் தலைவர் மோர்டென் ராஷ் தெரிவித்தார்.

இதுவரை உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று அறியப்பட்ட தீவுக்கு செல்வதும் எங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தது. இவ்வளவு தீவிரமான சுற்றுச்சூழலில் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளும் புதிய உயிரினங்களைக் கண்டறிவதற்காக எங்கள் குழு அங்கு சென்றது என்று மோர்டென் கூறுகிறார்.

ஒரு சிறிய ஹெலிகாப்டரில் நாங்கள் ஆறு பேர் சென்றோம். ஊடாக் தீவு இருக்கும் நிலையை நாங்கள் சென்றடைந்த பொழுது எங்களால் அதைக் கண்டறிய இயலவில்லை. உலகின் இந்தப் பகுதியில் வரைபடங்கள் மிகவும் துல்லியமாக இருக்காது என்று அவர் கூறுகிறார்.

இதன் காரணமாக அந்தத் தீவு எங்கே இருக்கிறது என்று நாங்களாகவே தேடத் தொடங்கினோம். உற்சாகம் மிகுந்த சில நிமிடங்களுக்கு பின்பு கழிமண், பனிப்பாறை வண்டல் மற்றும் சரளைக் கற்கள் கடல் பனியால் சூழப்பட்ட, செடிகள் எதுவும் முளைக்காத ஒரு பகுதியைச் சென்றடைந்தோம்.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுபாட்டில் உள்ள சுயாதீன ஆர்டிக் பிரதேசமாகும்.

இந்தப் பயணத்திற்கு பின்பு இதுதொடர்பான நிபுணத்துவம் பெற்ற பல வல்லுநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பல ஆலோசனைகளுக்கு பின்பு உலகின் வட கோடியில் இருக்கும் தீவை நாங்கள் ஒரு விபத்தாகக் கண்டுபிடித்ததை உணர்ந்தோம் என்று அவர் கூறுகிறார்.

அறிவியல் ரீதியாகப் பார்க்கும் பொழுது இந்த தீவின் கண்டுபிடிப்பு அவ்வளவு ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று மோர்டென் ராஷ் கூறுகிறார்.

"ஆனால் தனிப்பட்ட விதத்தில் பார்க்கும் பொழுது உலகின் வட கோடியில் இருக்கும் இடத்துக்குச் சென்று, தங்கள் பூட்ஸ்களில் களிமண்ணை ஆக்கிக் கொண்ட, ஆறு மனிதர்களில் நீங்களும் ஒருவர் என்பது ஒரு வேடிக்கையான விஷயம்," என்று அவர் கூறுகிறார்.

இந்த தீவுக்கு க்விகெர்டாக் அவன்னர்லேக் (Qeqertaq Avannarleq) என்று பெயரிட வேண்டும் என்று இந்த அறிவியலாளர்கள் விரும்புகிறார்கள். கிரீன்லாண்டிக் மொழியில் இதற்கு 'வட கோடியில் இருக்கும் தீவு' என்று பொருள்.

சமீப ஆண்டுகளில் கிரீன்லாந்து அடிக்கடி செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2019ஆம் ஆண்டு கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைகொடுத்து வாங்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் இது 'ஓர் அபத்தம்' என்று டென்மார்க் அவரது கூற்றை நிராகரித்தது.

எனினும் கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த ஆர்வம் சர்வதேச அளவில் தொடர்ந்து நீடிக்கிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!