நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

'கர்ப்பமாக இருப்பது ரொம்ப சிரமம்தான்..!' - ஒருநாள் கர்ப்பிணியாக வாழ முயன்ற டிக்டாக் பிரபலம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெயிட்லாண்ட் ஹான்லே பேறு காலத்தில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை அறிய விரும்பி ஒருநாள் கர்ப்பிணியாக வாழ ஆசைப்பட்டுள்ளார்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஒருவர் கர்ப்பிணி போல் வாழ ஆசைப்பட்டு இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மெயிட்லாண்ட் ஹான்லே. பேறு காலத்தில் பெண்கள் எவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என அறிய விரும்பியுள்ளார். இதற்காக இவர் எடுத்த முயற்சிதான் வித்தியாசமானது. இதுதொடர்பாக அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

பேறு காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கு வாழ்வில் மறக்க முடியாத அழகான நாட்கள். பேறு காலத்தின் போது கருவில் இருக்கும் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளும் பெண்களால் உணர முடியும். குழந்தை திரும்புவதும், வயிற்றில் எட்டி உதைப்பது என குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளை பெண்கள் அறிவார்கள். இது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும்  இந்த காலக்கட்டத்தில் அவர்கள் கடுமையான சிரமங்களை அனுபவிப்பார்கள். பேறு காலத்தில் ஒவ்வொரு பேண்ணுக்கு உடலில் மாறுபாடுகள் ஏற்படும். சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும். உடலில் மாற்றங்கள் ஏற்படும் 9-வது மாதத்தில் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களும், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களும் ஆண்களுக்கு தெரியாது. தான் அப்பாவாகப்போகிறேன் என்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெயிட்லாண்ட் ஹான்லே பேறு காலத்தில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை அறிய விரும்பினார். இதன்காரணமாக 9-வது மாதத்தில் பெண்கள் இருப்பது போல்  ஒருநாள் வாழ ஆசைப்பட்டுள்ளார்.


 ஒரு பெரிய தர்பூசணியை எடுத்து தனது வயிற்றில் கட்டிக்கொண்டார். பேறு காலத்தில் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும் என்பதால் தனது மார்பில் சிறிய அளவிலான இரண்டு தர்ப்பூசணிகளை கட்டிக்கொண்டார். ப்ளாஸ்டிக் டேப்பை கொண்டு உடல் முழுவதும் கட்டிக்கொண்டு நேராக படுக்கைக்கு சென்று படுத்துவிட்டார். தன்னை ஒரு கர்ப்பிணி பெண் போல் பாவித்துக்கொண்டவர். படுக்கையில் இருந்து எழுந்திருக்க முற்படுகிறார்.பலமுறை எழுந்திருக்க முயன்றும் தோற்றுப்போனார் அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை.


அந்த வீடியோவில் பேசிய மெயிட்லாண்ட் ஹான்லே, நான் உண்மையில் இது மிகவும் சாதாரணமாக இருக்கும் நினைத்தேன். கர்ப்பிணியாக இருப்பது சிரமம்தான் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!