நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழகைக் கூட்ட பின்பக்க அறுவைச் சிகிச்சை: உட்கார முடியாமல் அவதிப்படும் 24 வயது மாடல்

அமெரிக்க மாடல் அழகைக் கூட்ட செய்துகொண்ட அறுவை சிகிச்சையால் உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நவீன மருத்துவ உலகில் எதுவும் சாத்தியம் என்ற நிலை உள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு மருத்துவ உலகம் வளர்ந்துவிட்டபோது தவறான சிகிச்சை நடைபெறுவது என்பதும் அதிக அளவில் இருந்துவருகிறது. ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோருக்கு தவறான சிகிச்சையளிக்கப்பட்டு நோயாளி பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது மாடல் காசுமி ஸ்குரிட்ஸ்(புனைப் பெயர்), தன்னை உடல் பருமானக இருப்பதாக கருதியுள்ளார். அதனால், அவர் டயட் மூலம் உடலைக் குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், அதனால் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. அவரது உடல் பருமன் குறையவில்லை. அதனால், அறுவைச் சிகிச்சை மூலம் மார்பு பகுதி மற்றும் பின்பகுதியை குறைப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

அதற்காக 14 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளார். ஆனால், அறுவைச் சிகிச்சை அவர் நினைத்தபடி வெற்றிகரமாக நிறைவடையவில்லை. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் அவர் விரும்பிய அழகைப் பெற்றாலும் அவரால் முன்பைப் போல இயல்பாக உட்கார முடியவில்லை. இதுகுறித்து தெரிவிக்கும் அவர், ‘நான் எந்த வேலைகளைச் செய்தாலும் நின்றுகொண்டே செய்கிறேன். நான் எல்லா இடங்களுக்கும் தலையனையுடனேயே செல்கிறேன். இருந்தாலும் அவர் தன்னுடைய புதிய உருவத்தை மாற்றிக் கொள்ளவிரும்பவில்லை.

இந்த உருவத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடிவதாக கூறுகிறார். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 25,000 அமெரிக்க டாலர் பணம் சம்பாதித்த நான் தற்போது 2,00,000 அமெரிக்க டாலர் பணம் சம்பாதிக்க முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!