நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தைராய்டுக்கு தீர்வு தரும் ஜூஸ்

 உடலில் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாவிட்டால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவரது உடலில் தைராய்டு, தேவையான அளவை விட அதிகமான ஹார்மோன்களை சுரந்தால், அது ஹைப்பர் தைராய்டிசம் எனப்படும்.


குறைவான அளவில் ஹார்மோன்களை சுரந்தால், அது ஹைப்போ தைராய்டிசம் எனப்படும். வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளக்கூடிய சிக்கலான பிரச்சினையாக தைராய்டு பாதிப்பு அமைந்திருக்கிறது.

ஆரம்ப நிலையிலேயே தைராய்டு பிரச்சினையை கண்டறிந்து சரியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வந்தால் குணப்படுத்திவிடலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்றவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. எலுமிச்சை ஜூஸ் பருகுவதும் தைராய்டு பாதிப்பை கட்டுப்படுத்த உதவும். வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸை பருகுவது உடலை சமநிலையில் பராமரிக்க உதவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் துணைபுரியும். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, உடலில் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்கவும் வழிவகை செய்யும்.

தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படுவதற்கு வைட்டமின் சி-யின் பங்களிப்பு இன்றியமையாதது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். லேசாக ஆறியதும் அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து பருகலாம். காலை உணவை சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து பருகுவது நல்லது. அதுபோல் மதிய உணவுக்கு பின்பு பருகலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!