நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இப்படியும் சகோதரிகளா..! தங்கள் கல்லீரலையே தம்பிக்கு தானமளித்த சகோதரிகள்

 உத்தர பிரதேச மாநிலம் படாயு பகுதியைச் சேர்ந்தவர் அக்சத்(14). இச்சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தான். அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும் எனவும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கல்லீரல் தானம் வழங்குவோரும் கிடைக்கவில்லை.


உத்தர பிரதேச மாநிலம் படாயு பகுதியைச் சேர்ந்தவர் அக்சத்(14). இச்சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தான். அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும் எனவும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கல்லீரல் தானம் வழங்குவோரும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது இரு சகோதரிகளான நேகா (29), பெர்னா (22) தங்களது சகோதரருக்காக கல்லீரலைத் தானமாக வழங்க முன்வந்துள்ளனர். ஒருவர் உடலில் ஒரேயொரு கல்லீரல் மட்டுமே இருக்கும் என்பதால் ஒருவர் மட்டுமே முழு கல்லீரலையும் தானம் செய்ய வாய்ப்பில்லை. இதனால் இரு சகோதரிகளும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி இருவரும் பாதி பாதி கல்லீரலை தானமாக வழங்கப் போவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர். மிகவும் சிக்கலான இந்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை டெல்லி அருகே குர்காவ்ன் நகரிலுள்ள மெதந்தா மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டனர். 


மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அறுவைச் சிகிச்சை செய்து அக்சத்தின் உயிரைக் காப்பாற்றினர். சகோதரர்-சகோதரி உறவுகளைப் போற்றும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று இந்த அறுவைச் சிகிச்சை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் நீலம் மோகன், கல்லீரல் பாதிப்பு மட்டுமன்றி, உடல் பருமனாலும் சிறுவன் அக்சத் அவதிப்பட்டு வந்தார். அவரது சகோதரிகளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.

தற்போது மூவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. இதுதான் சகோதரத்துவத்தைப் போற்றும் உண்மையான ரக்ஷா பந்தன். கல்லீரல் பாதிப்பால் அவதிப்படு வோருக்கு உறவினர்கள், நண்பர்கள் பாதி கல்லீரலை தானமாக வழங்கலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி உயிரை காப்பாற்றலாம் என்றார்.


ALSO READ : ஜிம்மில் 'கண்ணுக்கு தெரியாத சக்தியால்' மனிதன் இழுக்கப்படுவதைக் காட்டும் வீடியோ வைரல்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!