நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 காலை வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த உணவுகள் நாள் முழுவதும் உங்கள் ஜீரண சக்தியைச் சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு சுறுசுறுப்பு தரும்.


ஊற வைத்த பாதாம்

இதில் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை அளிக்கின்றன. நாள் முழுவதும் விரதம் இருந்தாலும் 5-10 பாதாம் சாப்பிட்டால் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.

இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடல் எடை குறைப்பு, எலும்பு ஆரோக்கியம், மனஅழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இப்படி ஆரோக்கிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும்? பாதாம் பருப்பை ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையிலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம். இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.

எந்த நேரம் சாப்பிடலாம்? பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம்.

காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவது என்பது சாத்தியப் படாது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது.  



ALSO READ : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!