நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

  தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.


குறிப்பாக வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

தக்காளி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதிலும் இதனை வெறும் வயிற்றில் காலையில் எடுத்து கொள்வது நல்லது.

தற்போது  தக்காளியை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.


காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துங்கள். 


கண் பார்வையை அதிகரிக்க தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால், தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனையைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


 உடல் எடையைக் குறைக்க நினைக்கிறார்களோ, அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை வேகமாக குறைவதோடு, சில நாட்களிலேயே உடல் எடை குறைந்திருப்பதை நன்கு காணலாம். 


வயிற்றில் உஷ்ண பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடியுங்கள். இதனால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும் மற்றும் நாள் முழுவதும் நன்றாக உணர்வீர்கள். அதோடு தக்காளியை சாப்பிட்டால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.


 தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸை ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடும் பளிச்சென்றும் ஜொலிக்கும். 


 வயிற்றில் புழு பிரச்சனையால் ஒருவர் அவதிப்பட்டு வந்தால், ஒரு தக்காளியை வெட்டி, மிளகுத் தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் வயிற்று புழு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 


தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் தடுக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் குறையும். 



ALSO READ : உடல் எடையை குறைக்க இந்த ட்ரை ஃப்ரூட் சாப்பிட வேண்டும்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!