நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மருக்களை அடியோடு நீக்க வேண்டுமா? இதனை போக்க இதோ சில டிப்ஸ்....

 பொதுவாக மருக்கள் பெரும்பாலும் கைகளிலும் கால்களிலும் வளரும்.இருப்பினும், அவை தோலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். அவை பாதிப்பில்லாதவை, ஆனால் அவை வளர்ந்த பகுதியைப் பொறுத்து சங்கடமாக இருக்கலாம்.

இதனை எளியமுறையில் கூட வெளியேற்ற முடியும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.


* பூண்டை உரித்து மூன்று அல்லது நான்கு பற்களை பிரிக்கவும். அதனை அரைத்து பின்னர் மருவில் தடவி அப்படியே விட்டு விடவும். சுமார் 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு இறுதியாக சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், சில நாட்களில் மருக்கள் முழுவதுமாக வேரிலிருந்து காய்ந்து விழுந்து விடும்.

* முகத்தில் உள்ள மருக்களை நீக்க வெங்காயத்தையும் பூண்டுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த இரண்டையும் முதலில் நன்றாக அரைத்து பின் அதன் சாற்றை எடுக்கவும். இப்போது பருத்தியின் உதவியுடன் மருக்கள் மீது தடவி சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் விடவும். இறுதியாக சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

* ஆமணக்கு எண்ணெயை பூண்டுடன் பயன்படுத்தினால், மருக்கள் உதிர்ந்து விடும். இதற்கு, 2 முதல் 3 பூண்டு பற்களை எடுத்து அரைத்து, அதில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயைக் கலக்கவும். இரவில் தூங்கும் போது பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி, காலையில் தண்ணீரில் கழுவவும்.    



ALSO READ : Weight Gain: உடல் எடையை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! இதை தவிர்த்தால் ஒல்லியாகலாம்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!