நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி நன்கொடை - ஐ.நா.சபை பாராட்டு

இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது.
காபூல், 

ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. ஆப்கானிஸ்தான் உதவி மிஷன் திட்டத்தின், சிறப்பு பிரதிநிதியான டிபோரா லியான்ஸ் ஆகியோர் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது,

“ஆப்கானிஸ்தானில் கொரோனா 2-வது அலை எழுந்துள்ளது. விழிப்புடன் இல்லாவிட்டால் 3-வது அலை ஏற்படக்கூடும். தடுப்பூசி போடும்பணி தற்போது தொடங்கி உள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி உள்ளனர். சீனாவும் குறிப்பிட்ட அளவிலான தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஐ.நா. தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் பேரிடர் கால உணவு பாதுகாப்பின்மை ஏற்படக்கூடாது எனும் நோக்கில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி உள்ளது. மேலும் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள, 9 லட்சத்து 68 ஆயிரம் டோஸ் அளவு கோவேக்சின் தடுப்பூசியை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க சம்மதித்துள்ளது. இதில் 5 லட்சம் டோஸ்கள் இந்தியா மானியமாக வழங்குகிறது” என்றார்.

ஆப்கானிஸ்தானில் 56 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!