Posts

Showing posts from August, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காதலை தூண்டும் உணவுகள்!

Image
  காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையாக எழும் உணர்வும் கூட. பசி, தாகம் போல காதலும் நமக்கான உணர்வுதான். அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கும். காதலில் கசிந்துருக உடலுக்கும், மனதுக்கும் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம் . காதலை தூண்டும் உணவுகள் பற்றி  பார்ப்போமா... தக்காளி காதலுணர்வையும், பாலுணர்வையும் தூண்டக்கூடிய சத்துக்கள் இதில் உள்ளதால், ‘லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது. கிவி இதில் போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தை பேறுக்கு திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்கு சக்தி கொடுக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும். லெட்யூஸ் முட்டைகோஸ் போன்ற தோற்றமுடைய இது பல வகை வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியது. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும். காதல் உணர்வை தூண்டும். பட்டாணி ‘மூட் ஸ்விங்ஸ்’ என்று சொல்லக்கூடிய இது மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறி

உங்கள் பார்ட்னரின் குறட்டையால் தூக்கம் கெடுகிறதா? சிக்கலை சரி செய்ய எளிய வழி...

Image
  இரவு தூக்கத்தின் போது மூன்றில் ஒரு ஆண் மற்றும் நான்கில் ஒரு பெண் குறட்டை விடுவதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தூங்கும் போது எப்போதுமே குறைட்டை விட்டு கொண்டிருப்பது அவரது தூக்கத்தின் தரத்தை அது பாதிக்க செய்யும். பகல்நேர சோர்வு, எரிச்சல் மற்றும் பல உடல்நல பிரச்சனைக்ளுக்கு காரணமாக அமைகிறது குறட்டை பழக்கம். உடல் பருமன் குறட்டைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. அதே போல ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதய நோய் அபாயத்தின் அறிகுறியாகும். பல வீடுகளில் தம்பதியரில் ஒருவர் குறட்டை பழக்கம் கொண்டிருப்பதால் அவரது துணையின் இரவு தூக்கமும் சேர்ந்து கேள்விகுறியாகி விடுகிறது. வெளிநாடுகளில் குறட்டை பஞ்சாயத்தால் பிரிந்து போன தம்பதிகளின் கதை ஏராளம். ஒருவேளை உங்கள் வாழ்கை துணை குறட்டை பழக்கம் கொண்டவராக இருப்பின் அது நிச்சயம் உங்களுக்கும் சிரமத்தையே ஏற்படுத்தும். குறட்டை விடுபவருடன் ஒரே ரூமில் தூங்குவது என்பது மிகவும் எரிச்சலளிக்க கூடியதாகவும் . அதற்காக தம்பதியர் இருவரும் தனித்தனி ரூம்களில் தூங்குவது குறட்டைக்கான தீர்வு அல்ல. இரவு தூக்கத்தின் போது மூன்றில் ஒரு ஆண் மற்றும் நான்கில் ஒரு பெண் குறட்

உடல் எடையை குறைப்பதை விட ஃபிட்டாக இருப்பதே அவசியம் : அதற்கான வாழ்க்கை முறை டிப்ஸ் உங்களுக்காக...

Image
ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பு, பல்வேறு நோய்கள் வருவது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் வாழும் இடம், வசதி, உணவு பழக்கம், கலாச்சாரம் அடிப்படையில் வித்தியாசமானது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பு, பல்வேறு நோய்கள் வருவது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், தினமும் உடற்பயிற்சி செய்வது, நமது அன்றாட வேலைகளை நாமே செய்வது போன்றவற்றின் மூலம் உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றலாம். அன்றாட உணவில் கவனம் தேவை :   பெரும்பாலான மக்கள் உடல் எடையை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் குறைத்து விட வேண்டும் என நினைக்கின்றனர். உடல் எடை இழப்பு என்பது ஒரு பயணமாக இருக்க வேண்டும். அதாவது தொடந்து டயட் முறைகளை பின்பற்ற வேண்டும். சிலர் ஒரு மாதம் அல்லது ஒ

Vegetarian Diet: சைவத்தில் இத்தனை வகையா? நீங்கள் எந்த வகை?

Image
  சைவ உணவு மற்றும் அசைவ உணவு என்ற இரு வகைகளில், அவரவர் தேர்வுக்கான காரணங்கள் மாறுபடும். சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சைவ உணவிலும் பல வகைகள் உள்ளன. ..   உணவு என்பது உயிரினங்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று. காலப் போக்கிற்கு ஏற்ப உண்ணும் உணவுகளும், அவற்றின் விதங்களும் மாறிக் கொண்டே வருகின்றன. பசிக்காக சாப்பிடுபவர்கள் சிலர் என்றால், ருசிக்காக சாப்பிடுபவர்கள் பலர். எதுஎப்படியிருந்தாலும், உலக அளவில் உணவு வகைகள் இரண்டு பெரிய பிரிவுகளில் அடங்கிவிடுகின்றனர்.  சைவ உணவு மற்றும் அசைவ உணவு என்ற இரு வகைகளில், அவரவர் தேர்வுக்கான காரணங்கள் மாறுபடும். மத அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், விலங்குகளின் உரிமைகள் போன்ற நெறிமுறை காரணங்களுக்காகவும் பெரும்பாலான மக்கள் சைவ உணவை பின்பற்றுகிறார்கள். சுற்றுச்சூழல் காரணங்களுக்காக சைவ உணவு உண்பவர்களாக மாற முடிவு செய்பவர்களும் உண்டு. கால்நடை உற்பத்தியானது, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கிறது, காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது மற்றும் அதிக அளவு தண்ணீர், ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள் தேவைப்படுகின்றன. எனவே சைவ உணவு சாப்பிடுபவர்களின்

மனைவியும்.. மகிழ்ச்சியும்..

Image
  மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைத் துணை அமைந்தால் அவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, துணையின் ஆரோக்கியத்திலும், ஆயுளிலும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதொடர்பாக சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், “மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4,400 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். உடல் ரீதியான செயல்பாடுகள், உடல் நலம், பாலினம், வயது, கல்வி, வருவாய், வாழ்க்கை திருப்தி உள்பட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆய்வு செய்ததில் 16 சதவீதம் பேர் இறந்திருக்கிறார்கள். வயது முதிர்வு, குறைந்த பொருளாதார நிலை

கிரீன் டீ தரும் சரும அழகு

Image
  கிரீன் டீ உடல் உள்ளுறுப்பு களுக்கு மட்டுமல்ல வெளிப்புற சருமத்துக்கும் நலம் சேர்க்கக் கூடியது. அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்திற்கு நிவாரணம் தரும். முகப்பருக்களுக்கு முக்கிய காரணம், சீபம் அதிகபடியாக உற்பத்தியாவதுதான். இது சரும துளைகளை அடைத்து பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டி பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும். முகப்பருவை குணப்படுத்தலாம் இரண்டு கிரீன் டீ பேக்குகளை கத்தரித்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். பிறகு அந்த கிரீன் டீ தூளை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து முகப்பரு இருக்கும் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். பின்பு உலர்ந்த துண்டு கொண்டு முகத்தை துடைக்கலாம். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். வயதான தோற்றத்தைகட்டுப்படுத்தலாம்

கழிவுகளில் உருவான ‘உலக அதிசயங்கள்’

Image
  டெல்லிக்கு சுற்றுலா செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் ‘7 உலக அதிசயங்கள்’ இடம் பிடித்துள்ளன. இந்த உலக அதிசயங்கள் அனைத்தும் பிளாஸ்டிக், இரும்பு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட கழிவு பொருட்களால் தயாரானவை. அதனால் இதற்கு ‘வேஸ்டு டூ வொன்டர்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். தெற்கு டெல்லி மாநகராட்சி சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘வேஸ்டு டூ வொன்டர் தீம் பார்க்’ நிஜாமுதீன் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது. இந்த தீம் பார்க் உருவாக்கத்திற்கு சுமார் 150 டன் கழிவு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 கலைஞர்கள், 7 துணை கலைஞர்கள், 70 வெல்டர்கள் மற்றும் ஏராளமான உதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள உலக அதிசயங்களின் உருவாக்கம் பற்றிய தொகுப்பு இது. 1. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை: கழிவு பொருட்கள்: சுமார் 7-8 டன் உயரம்: 35 அடி இதன் பீடம் செங்கற்களின் தோற்றத்தில் காட்சியளித்தாலும் அதனை உருவாக்குவதற்கு பழைய பைப்புகள், உலோக துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தேவியின் தலையை அலங்கரித்திருக்கும் கிரீடம் கார் ரிம்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தேவிய

Indian Food: முதன்முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரியரின் வீடியோ வைரல்

Image
  உணவு சுவையாக இல்லாவிட்டால், பணம் செலுத்தப் போவதில்லை என்று சொன்னவர், இரு மடங்கு பணம் செலுத்த தயாராக வைத்த இந்திய உணவு... முதல் முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரிய மனிதரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது முதன்முறையாக இந்திய உணவை சுவைப்பவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டக்கரா ரே மற்றும் லம்போகின்னி தம்பதிகள், இந்திய உணவை முயற்சித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாகிறது. watch video இந்த ஜோடி அமெரிக்காவின் கனெக்டிகட்டில் உள்ள பொனானி டேக் அவுட் இந்தியன் கிச்சன் (Bonani Take Out Indian Kitchen in Connecticut) என்ற உணவகத்திற்கு சென்றது. அவர்கள் சாதம் மற்றும் பராத்தாவை சாப்பிட்டனர்.   Lamb Vindaloo என்ற உணவுக்கும் ஆர்டர் கொடுத்த தம்பதியினர், இந்த உணவு சுவையாக இல்லாவிட்டால், பணம் செலுத்தப் போவதில்லை என்று பணியாளரிடம் தெரிவித்தார். அவருக்கு பதிலளித்த உணவகப் பணியாளர், இது ருசியான உணவு, இனிப்பாக இருக்காது, ஆனால் கொஞ்சம் காரமாக இருக்கும்” என்று தெரிவித்தார். ஆனால் உணவை ஒரு வாய் சாப்பிடவுடன், மேலும் சாதம் வாங்கிய லம்போகின்னி, "நான் ஏற்கனவே ஒரு இந்தி

Be Careful: கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து A படங்களை பார்த்த வினோத நபர் யார் தெரியுமா?

Image
  கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து அதில் A படங்களை பார்த்த வினோத நபர்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் தானே? மனிதனுக்கு விருப்பங்கள் என்பது ஒரு அளவுடன் இருந்தால் பரவாயில்லை. அளவை மீறினால் தான் எதுவும் சிக்கலாக மாறுகிறது. மது அருந்துவது, புகைபிடிப்பது, பாலியல் விருப்பங்கள், ’ஏ’ படங்களைப் பார்ப்பது மட்டுமா மனிதனுக்கு போதையைத் தருகிறது? ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீதான அதீத ஆசை, மோகம் என்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. விளையாட்டுகள், உணவு, பானங்கள், ஒரு குறிப்பிட்ட நாடகத் தொடரைப் பார்ப்பது, மெகா சீரியல் மோகம் என பல விஷயங்கள் மக்களுக்கு மோசமான போதையைக் கொடுக்கலாம்.  சில சமயங்களில் இந்த ஆசைகள் ஒரு குறிப்பிட்ட செலவிற்குள் அடங்கிவிடும். இருந்தாலும், எதையும் அளவுடன் வைத்துக் கொள்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏதாவது ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அதில் இருந்து மீண்டு வெளிவர முயற்சிச் செய்யுங்கள். ஒரு ஆவண நிறுவனத்தில் தயாரிப்பாளர் மார்க் ஜோஹன் தனது அதீத விருப்பத்திற்காக நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாய் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உள்ளூர் நாளிதழின் அறிக்

Stretch marks removal: பிரசவ தழுப்புகளை நீக்கும் ‘4’ வீட்டு வைத்தியங்கள்

Image
  உடலில் கோடுகள் போல் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்  எனப்படும் பிரசவ தழும்புகள் தாய்மை அடைந்த பெண்களுக்கு உண்டாகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, சில காரணங்கள் காரணமாக ஆண்களுக்கும்  ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.   உடலில் கோடுகள் போல் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்  எனப்படும் பிரசவ தழும்புகள் தாய்மை அடைந்த பெண்களுக்கு உண்டாகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, சில காரணங்கள் காரணமாக ஆண்களுக்கும்  ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.   ஸ்ட்ரெச் மார்க் காரணங்கள் ஆண்களை விட அதிகமான பெண்களுக்கு தான் அதிக அளவில் ஸ்டரெச் மார்க் ((Stretch Marks) ஏற்படுகிறது. இதன் பின்வருபவை காரணம் ஆகும் - கர்ப்பம் காத்தில் விரைவான எடை அதிகரிப்பு  குறைதல், குறிப்பாக, வயிற்று பகுதி விரிவடைந்து பின் , பிரசவத்திற்கு பின் திடீரென் சுருங்குவதன் காரணமாக, தோல்களில் வடுக்கள் ஏற்படுகிறது. இது பிரசவ தழும்புகள் என்றும் கூறப்படுகிறது - கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளின் பயன்பாடு - மார்பகங்களை பெரிது படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏற்படுகிறது - சிசேரியன் அறுவை சிகிச்சை, முதலியனவும் இதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட காரணங்கள்

இன்ஸ்டாகிராமில் ஜோதிகா என்ட்ரி: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!

Image
  இன்ஸ்டாகிராம் வந்துள்ள நடிகை ஜோதிகாவை ரசிகர்கள் பலரும் உச்சாகமாக வரவேற்று உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து பிரபலமான கதாநாயகியாக இருப்பவர் நடிகை ஜோதிகா. கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் செய்து கொண்டப்பின் சில வருடங்கள் கழித்து ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகை ஜோதிகாவின் (Jyothika) நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் ஜோதிகா சமூக வலைத்தள (Social Media) பக்கங்களிலும் தலை காட்டாமல் இருந்த நிலையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் (Instagram) இணைந்துள்ளார். தன்னுடைய முதல் பதிவில் முதன்முறையாக சோசியல் மீடியாவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜோதிகா, தன்னுடைய ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிறைய நல்ல விஷயங்களை பகிர உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஜோதிகாவை அவரது கணவரும் நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். அவர் தன்னுடைய கமெண்டில் என் மனைவி வலிமையானவள். முதன்முறையாக உன்னை இன்ஸ

’நடக்கும் இலை’ : இயற்கையின் அற்புதம் - உண்மை என்ன?

Image
  இலைப் பூச்சிகள் இனத்தில் பெண்கள் மட்டுமே உள்ளன. ஆண் பூச்சிகளே கிடையாது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் இருக்கும் பூச்சியைப் பார்த்து இலையா அல்லது பூச்சியா? என வியப்பில் ஆழ்ந்துள்ளனர் சமூகவலைதளத்தில் அண்மையில் ஒரு வீடியோ வைரலானது. அதில், இலை ஒன்று நடப்பதை பார்த்து பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. இலை எப்படி நடக்கும்? என யோசிக்கும்போது, அது இலை அல்ல, பூச்சி என அறிந்து கொண்டனர். ஆம், பார்ப்பதற்கு அச்சு அசலாக இலை போலவே அந்தப் பூச்சி இருக்கும். சாதாரணமாக பார்க்கும்போது, உங்களால், அது ஒரு பூச்சி என்பதை உடனடியாக கிரகித்துக்கொள்ள முடியாது. அந்தளவுக்கு தத்ரூபமாக அந்த பூச்சி இருக்கும். அறிவியல் பெயரில் இலைப் பூச்சியின் குடும்பம் ஃபிலியம் ஜிகாண்டியம் என அழைக்கப்படுகிறது. இந்த இலைப் பூச்சியை (leaf insect) ‘நடக்கும் இலை’ என்றும் அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற் போல இப்பூச்சியால் நடக்க மட்டுமே முடியும், பறக்க முடியாது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் இலைப் பூச்சி, இலைகளைத் தின்று வளரும்போது பச்சை நிறத்துக்கு மாறிவிடும். 2.3 அங்குலமே இருக்கும் இந்த இலைப் பூச்சிகள், இலைகளுடன் சேர்ந்திரு

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாதா..? காரணம் தெரிந்துகொள்ளுங்கள்...

Image
கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். உடல் எடை குறைப்பது தொடங்கி இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் வரையிலான உணவுப்பட்டியலில் கிரீன் டீயும் இடம் பெறுகிறது. அதோடு பால், டீ, காஃபி குடிக்கும் பழக்கம் மாறி கிரீன் டீ குடிப்பதுதான் வழக்கம் என சொல்லும் நிலைக்கு மக்கள் பழக்கமாகிவிட்டனர். கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் என்றாலும் அதை வெறும் வயிற்றில் குடிக்கலாமா என்றால் நிச்சயம் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். ஏன் தெரியுமா..? கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். அல்சர் போன்ற நோய்கள் கொண்டவர்கள் கிரீன் டீயை வெறும் வயிற்றில் காலையில் குடிக்கவே கூடாது என பரிந்துரைக்கின்றனர். அதோடு வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் புரோட்டீன் அளவு குறைந்து இரத்த ஓட்டம் தடைபடும் ஆபத்து உண்டாகும். எனவே குரீன் டீயுடன் ஏதாவ

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாதா..? காரணம் தெரிந்துகொள்ளுங்கள்...

Image
கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். உடல் எடை குறைப்பது தொடங்கி இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் வரையிலான உணவுப்பட்டியலில் கிரீன் டீயும் இடம் பெறுகிறது. அதோடு பால், டீ, காஃபி குடிக்கும் பழக்கம் மாறி கிரீன் டீ குடிப்பதுதான் வழக்கம் என சொல்லும் நிலைக்கு மக்கள் பழக்கமாகிவிட்டனர். கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் என்றாலும் அதை வெறும் வயிற்றில் குடிக்கலாமா என்றால் நிச்சயம் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். ஏன் தெரியுமா..? கிரீன் டீயின் டானின்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது வயிற்றில் ஆசிடை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி அதைத்தொடர்ந்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். அல்சர் போன்ற நோய்கள் கொண்டவர்கள் கிரீன் டீயை வெறும் வயிற்றில் காலையில் குடிக்கவே கூடாது என பரிந்துரைக்கின்றனர். அதோடு வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் புரோட்டீன் அளவு குறைந்து இரத்த ஓட்டம் தடைபடும் ஆபத்து உண்டாகும். எனவே குரீன் டீயுடன் ஏதாவ

அவனி லெகரா: இந்திய பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெண் - 8 முக்கிய தகவல்கள்

Image
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா இந்தியாவுக்காக இன்று தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா, மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் இவர் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார். அவனி குறித்த எட்டு முக்கிய தகவல்கள் இதோ. 2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றால் உண்டான முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவனி மாற்றுத்திறனாளி ஆனார். 19 வயதாகும் அவனி லெகரா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.  2015இல் ஜெய்ப்பூரில் உள்ள ஜகத்புரா விளையாட்டு வளாகத்தில் தமது பயிற்சியைத் தொடங்கினார் அவனி. அவரது தந்தை அவனி விளையாட்டில் ஈடுபட ஊக்கமளித்தாகவும், தொடக்கத்தில் அவர் துப்பாக்கி சுடுதல், வில் வித்தை என இரண்டிலுமே ஆர்வம் காட்டினார் என்றும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி இணையதளம் கூறுகிறது. இந்தியாவுக்காக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் நூல் அவனிக்கு பெரும் ஊக்கம் தந்ததாக அந்த இணையதள

'பிளாக் காபி' உடல் எடையை குறைக்க உதவுமா..?

Image
பிளாக் காபி உடனடி பவர் பூஸ்டர் அதோடு புற்றுநோய், இருதய நோய்கள், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. சாதாரணமாக ஒருநபர் ஒரு நாளைக்கு 5 முறையாவது காபியை குடிக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிளாக் காபி (Black Coffee). பிளாக் காபி குடிப்பதற்கும், எடை குறைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் அதிகளவு கஃபைன் உள்ளது. இதன் முக்கியமான பலன்களில் ஒன்று புற்றுநோய்க்கு எதிராக போராடுவதாகும். இந்த பதிவில் பிளாக் காபிக்கும், எடை குறைப்பிற்கும் இடையே இருக்கும் ரகசிய தொடர்பு என்னவென்று பார்க்கலாம். பிளாக் காபி என்பது காபி பிரியர்களின் பிரியமான பானமாகும். இது அவர்களுக்கு போதை மற்றும் சுவை அளிப்பதைத் தவிர, இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு உடனடி பவர் பூஸ்டர் அதோடு புற்றுநோய், இருதய நோய்கள், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர, எடை இழப்புக்கு உதவுவதிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிளாக் காபி (Black Coffee) வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும

கோடிகளை குவித்தாலும், நான் இப்படித் தான் - வைரலாகும் குத்துச்சண்டை வீரரின் புகைப்படம்

Image
கெமரூன் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரரான பிரான்சிஸ் நிகானு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் இவர், மிக எளிமையாக காட்சியளிக்கும் வீட்டினுள் இருந்தபடி உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டு இருக்கிறது. இவர் இன்றும் எளிய வாழ்வை வாழ்வதாக பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. "இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் பிரான்சிஸ் நீகான்னு... UFC fighter... உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரர்... இந்த விளையாட்டு மூலம் கோடிக்கணக்கில் அவர் பணத்தை சம்பாதித்து விட்டார்...  அவரை காண பல விஐபிக்கள் மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் காத்துக்கொண்டு உள்ளன... ஆனால் அவர் சிறு வயதில் சரியாக சாப்பிடக்கூட முடியாத அளவில் ஏழ்மையில் இருந்தவர்... இப்போதும் அவரது சொந்த நாட்டுக்கு கேமரூன் செல்லும்போது தனது பழைய வாழ்க்கை எப்படியோ அப்படியே வாழ்ந்து வருகிறார்... அவர் சொல்லும் ஒரே வார்த்தை எவ்வளவு எனக்கு பணம் வந்தாலும் என் அம்மாவுக்கு நான் மகன்தான்... அதை மாற்ற முடியாது..." 

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!