Posts

Showing posts from September, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்று உலக முதியோர் தினம்: வாழ்த்துகளை கூறி ஆசி பெறலாம்

Image
தள்ளாத வயதில் தவிக்க விடாமல் அனைத்து முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறலாம். முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் நடத்த வேண்டும். அனுபவங்களின் அமுதசுரபியாக திகழ்பவர்கள் முதியவர்கள். வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி போன்ற வார்த்தைகளை சமுதாயத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம். வயது என்பது முதுமைக்கான அளவுகோல் இல்லை என்றாலும், வயதானவர்களை முதியவர்கள் என்று அழைக்கிறோம். உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும், ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக கடந்த 1991-ம் ஆண்டு முதல் அக்டோபர் 1-ந்தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்ப

இந்த ஸ்மார்ட்போன்களில் Youtube, Gmail இயங்காது - கூகுள் தடை பின்னணி என்ன?

Image
  பழைய சாப்ட்வேரான கிங்கர்பிரெட் முதல் ஆன்டிராய்டு 11 வரை உள்ள இயங்குதளத்தின் பல்வேறு பதிப்புகளில் இயங்கி வருவதாக கூறிய கூகுள், ஆன்டிராய்டு 12 இயங்குதளத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தது. ஆன்டிராய்டு 2.3 உள்ளிட்ட பழைய சாப்ட்வேர்களில் இயங்கும் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் யூடியூப், ஜிமெயில் ஆகிய செயலிகளின் சேவைகளை பெற முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. டெக் துறையின் அபார வளர்ச்சியின் காரணமாக புது சாப்ட்வேர்களின் இயக்கத்துக்கு ஏற்ப, கூகுள் நிறுவனம் தங்களின் சேவைகளை அப்டேட் செய்து கொண்டே வருகிறது. வைரஸ், தகவல் திருட்டு உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் அதற்கேற்ப அப்டேட் செய்யப்படும் ஆன்டிராய்டு வெர்சன்களில் உள்ள ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கூகுள் நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் கூகுளில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்டவை 3 பில்லியனுக்கும் அதிகமானவை செயல்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது. இவை அனைத்தும் பழைய சாப்ட்வேரான கிங்கர்பிரெட் முதல் ஆன்டிராய்டு 11 வரை உள்ள இயங்குதளத்தின் பல்வேறு பதிப்புகளில் இயங்கி வருவதாக க

இருளில் மூழ்கியுள்ள சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை.. அடுத்த ஆண்டு மார்ச் வரை மின்தடை ஏன்?

Image
  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் மின்வெட்டு பிரச்னை நீடிக்கலாம். சீனாவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்தடையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. விண்வெளியில் சாதனைகளை நிகழ்த்திய சீனா மின்னொளியில் மண்ணைக் கவ்வியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.. சந்திரனின் இருண்ட பாகத்தில் முதன்முதலில் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த சீனா, கடந்த சில நாட்களாக இருளில் சிக்கித் தவித்து வருகிறது. மின் பற்றாக்குறையால் ஒட்டு மொத்த மாகாணங்களும் முடங்கிப் போவதைத் தவிர்க்க, ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து சீனாவின் 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. முறை வைத்து விநியோகிக்கப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ள மின் தடையால் தெரு விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் என எதுவும் வேலை செய்யவில்லை. நெடுஞ்சாலையில் திடீரென விளக்குகள் எரியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் பகல் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே சமயம் இரவு நேரங்களில் வீட

அறுவை சிகிச்சையின்போது அழுதது ஒரு குற்றமா? - அதுக்கும் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை

Image
  Brief emotion என்ற பெயரில் அழுததற்காக தனியாக கட்டணம் வாங்கியிருக்கிறது அந்த மருத்துவமனை நிர்வாகம். அறுவை சிகிச்சையின் போது அழுதேன் என்பதற்காக எனக்கு ஒரு தொகையை மருத்துவமனை நிர்வாகம் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்திருப்பதாக பெண் ஒருவர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்வைப்பதாக உள்ளது. பொதுவாக தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல், ஜலதோஷம் என சென்றாலே கட்டண வசூலில் இறங்குவதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று இஷ்டத்துக்கு பில் போட்டு ஒரு பெரும் தொகையை வசூலித்துவிட்டு தான் அனுப்பி வைப்பார்கள். இந்த குற்றச்சாட்டை உண்மை என நிரூபிக்கும் வகையில் தான் ஒரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கிறது. பொதுவாக அறுவை சிகிச்சை என்றாலே பயம் தரக்கூடியதாக தான் இருக்கும். அப்போது மருத்துவர்களிடம் பயத்தில் கையை பிடித்து இழுப்பது, அழுவது, கத்துவது போன்ற செயல்களில் சில நேரங்களில் நோயாளிகள் ஈடுபடுவதுண்டு. அதே போலத்தான் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மிட்ச் என்ற பெண்மணி ஒருவர் மச்சத்தை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சைக்கு முன்னர்

வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் - காப்பாற்றிய டிரைவர்!

Image
  மத்தியப்பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எந்த இடத்தில் நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. சமயோசித்தமாக செயல்பட்டு இளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன் நின்று தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இணையத்தில் பரவிய அந்த வீடியோவில், ரயில்வே கிராஸிங்கில் இளம் பெண் ஒருவர் துப்பட்டாவால் முகத்தை மறைத்தவாறு நின்று கொண்டிருக்கிறார். ரயில் வரும் நேரம் என்பதால், கிராஸிங்கின் இருபுறமும் தடுப்பு போடப்பட்டு ரயில் செல்வதற்காக வாகனங்கள் சாலையில் காத்திருக்கின்றன. அந்த இளம் பெண் நின்று கொண்டிருக்கும் பகுதியிலும் ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ரயில் வரும் சத்தம் கேட்டவுடன், சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண், திடீரென அந்த தடுப்புக்குள் புகுந்து ரயில் வரும் தண்டவாளத்தில் சென்று நின்று கொண்டார். அப்போது, அங்கு ஆட்டோவில் காத்திருந்த டிரைவர், அந்தப் பெண் தற்கொலைக்கு முயல்கிறார் என அறிந்து கொண்டு, வேகமாக தடுப்பைச் தாண்டிச் சென்று இளம்பெண்ணை

தாகத்தை தணிக்க கரடி சிறுநீர் கலந்த நீரை கொதிக்க வைக்க முயற்சித்த பெண் - கலிபோர்னியா காட்டு தீ-க்கு காரணமா?

Image
  ஆபத்திற்கு பாவமில்லை என்று தாகத்திற்காக கரடியின் சிறுநீர் கலந்த தண்ணீரை தீ மூலம் கொதிக்க வைத்து குடிக்க நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடு எரிந்து சாம்பலாகி உள்ளது. 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர காட்டு தீயிலிருந்து உயிர் தப்பிக்க காடுகளுக்கு அருகில் குடி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காட்டு தீயை அணைக்க எண்ணற்ற தீயணைப்பு வீரர்கள் பல நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே இந்த காட்டு தீ பருவநிலை மாற்றங்கள் காரணமாகவோ அல்லது இயற்கையாகவோ ஏற்படவில்லை என்றும். ஒரு இளம்பெண் தான் இந்த காட்டு தீ ஏற்பட காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் தொடர்பு தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள 30 வயதா

மணமக்களை பின்னுக்கு தள்ளி கியூட்டாக போஸ் கொடுத்த ‘நாய்’- வைரலாகும் புகைப்படம்!

Image
  அந்த புகைப்படத்தில் திருமணம் செய்துகொள்ளும் அந்த திருமண ஜோடியின் அழகையே, ஹென்றி கைப்பற்றி கொண்டது. திருமணத்தில் மணமக்களை பின்னுக்கு தள்ளி போஸ் கொடுத்த ஹென்றி என்ற நாய் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்தில் எப்பொழுதும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மணமகனும்,மணமகளுமே. அண்மையில் நடந்த திருமண விழா ஒன்றில் திருமண ஜோடிகளையே பின்னுக்கு தள்ளி வைரலாகி கொண்டிருக்கிறது ஒரு புகைப்படம். நீங்கள் நாயை வளர்ப்பவர்களா? ஆம் என்றால் நிச்சயம் அந்த நாய் இல்லாமல் எதையும் செய்யமாட்டீர்கள். எங்கே போனாலும் கூட்டி செல்வது முதல் அன்றாடம் விளையாடுவது வரை நீங்கள் திருமணம் செய்வதாக இருந்தாலும் அந்த இடத்தில் அந்த நாய்க்கு தான் முதலிடம் நிச்சயம் என்றே சொல்லலாம். எந்த ஒரு செல்லப்பிராணிகளை எடுத்து கொண்டாலும், மனிதர்களிடையே எளிதில் ஒட்டிக்கொள்ளும். அதில் ‘நாய்’ சொல்லவே தேவையில்லை.நாம் எங்கு சென்றாலும் அதுவும் வரும். நாய்கள் பொதுவாக நாம் எதை செய்தாலும் செய்யக்கூடியவை. நாம் தினமும் செய்யக்கூடிய விஷயங்கள் முதல் வெளியே செல்வது வரை என்று வைத்து கொள்ளலாம். வெளிநாடுகளில் திருமணத்தின் போது மோதிரங்களை எடுத்து வர நாய்களை பயன்படுத்

திமிங்கலம் உருவாக்கிய வானவில்.. வாவ் சொல்லவைத்த காட்சி.. வைரல் வீடியோ..!

Image
ஆஸ்திரேலியாவில் ஒரு திமிங்கலம் கடலின் மேல்மட்டத்திற்கு வந்து ரெயின்போ பிரீத் எடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கடல் எப்பொழுதுமே மனிதனை வியக்க வைக்கும் செயல்களை செய்து காட்டிக்கொண்டே இருக்கும். நாம் காணாத பல அற்புதங்கள் கடலுக்குள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இன்னும் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் அதில் தோண்டி தோண்டி கண்டுபிடிக்க நிறையவே இருந்து கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி ஒரு சாதாரான சுற்றுலா பயணிக்கும் கூட கடல் தரும் வியப்புகள் குறைந்தபாடில்லை. அவ்வப்போது அவை வீடியோக்கலாகவும் வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வைரலாகின்றன. கடலில் நேரில் சென்று காணமுடியாத பலருக்கும் இப்படியான வீடியோக்கள் ஆசுவாசம் அளிக்கின்றன. அதனாலேயே அதிகமாக ஷேர் ஆகி வைரல் ஆகின்றன இது போன்ற வீடியோக்கள். கடல் மட்டுமின்றி கடல்வாழ் உயிரிகளும் அதன் குணங்களும், செயல்பாடுகளும் நமக்கு எப்பொழுதும் ஆச்சர்யமிக்க செயல்தான். அப்படி ஒரு வீடியோவைத்தான் ஆஸ்திரேலிய சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ இன்ஸடாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில் ஒரு திமிங்கலம் கடலின் மேல்பரப்பிற்கு வந்து ரெய

குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்!

Image
குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்! காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும். தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில்

அச்சு அசல் தளபதி விஜய் போலவே இருக்கும் நபர், இணையத்தில் வைரலான போட்டோ

Image
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. மேலும் தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. அதனை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் பார்ப்பதற்கு தளபதி விஜய் போலவே உள்ளார். அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

நீங்க QR கோட் மூலம் பணம் செலுத்துவிகளா அப்போ இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க.

Image
கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் தொடர்பு இல்லாத கொடுப்பனவுகள் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்து, QR Code வழக்கத்தில் உள்ளது. ஆனால் QR குறியீட்டைப் பயன்படுத்தி டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதன் மூலம் நாம் எவ்வளவு வசதியைப் பெறுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா, அபாயத்திற்கு சாத்தியம் உள்ளது. ஆம், QR குறியீடு தொடர்பான கட்டணத்தில் ஆபத்து உள்ளது. QR குறியீடுகள் டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்கி இருந்தாலும், இணைய குற்றவாளிகள் அவற்றை மற்றவர்களை ஏமாற்ற பயன்படுத்தியுள்ளனர். அரசுக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கி (SBI) யூசர்களுக்கு QR குறியீடுகள் ஒருபோதும் பணம் பெற பயன்படாது என்று எச்சரித்துள்ளது. QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் பெறுமாறு யாராவது உங்களிடம் கேட்டால், கவனமாக இருங்கள், அவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் QR குறியீடு மூலம் பணம் செலுத்தினால், அது தொடர்பான சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். QR குறியீட்டை செலுத்துவதற்கு முன், இந்த விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்: இன்றைய காலத்தில், நீங்கள் ஷாப்பிங்கிற்கு எங்கு சென்றாலும், அது ஷாப்பிங் மால், பெட்ரோல் பம்ப் அல்லத

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

Image
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும்.  கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம்.  முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய லொகேஷ

₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் - எப்படி சாத்தியமானது? - ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

Image
  பழைய கார், வீடு என சில நண்பர்கள் எங்கள் வாழ்க்கை முறையை கிண்டலடித்தனர். ஆனால் எங்கள் சிந்தனை சேமிப்பாக மட்டுமே இருந்தது. 35 வயதில் ஒரு பெண், 10 கோடி ரூபாயை சேமித்து வைத்துக் கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இந்தத் தொகையை அவர் சாதாரண வேலையை செய்து கொண்டு சேமித்திருக்கிறார். ஓய்வு பெற்ற அந்தப்பெண் தற்போது சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை குறித்து பிறருக்கு இலவசமாக பாடம் எடுத்து வருகிறார். 35 வயதாகும் கேட்டி டொனகனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. கேட்டி ஓய்வு பெறும் போது அவரின் கையிருப்பு 1 மில்லியன் பவுண்டுகள். காலம் முழுக்க சம்பாதித்து சேர்க்க முடியாத பணத்தை ஒரு சாதாரண வேலையில் இருந்து கொண்டு இந்த வயதிலேயே அவர் சேமித்துவிட்டு, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது ஓய்வு வாழ்க்கையை சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது சாத்தியமானதற்கு கேட்டி சொல்லும் ஒரு மந்திரச் சொல்தான் சேமிப்பு, ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை. கேட்டி, இங்கிலாந்தைச் சேர்ந்தவர். கேட்டியின் குடும்பம் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பம் தான் என்றாலும், சிறு வயதிலேயே அவர் பகட்டான ஆடை

உங்கள் சருமத்தை பொலிவாக்க உதவும் இயற்கை மூலிகைகள் : பக்கவிளைவுகள் இல்லாதது..!

Image
  நமது வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களே நமது அழகை பராமரிக்க போதுமானது. பெரும்பாலான தோல் பிரச்சனைகளுக்கு துளசி, வேம்பு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களே போதுமானது. தற்போது சந்தைகளில் எண்ணற்ற சரும பராமரிப்பு பொருட்கள் வந்துவிட்டது. சோப்பு, பேஸ் வாஷ், லோஷன், டோனர், க்ரீம்கள், மாய்சரைசர்ஸ் என்ன அடிக்கடி கொண்டே செல்லலாம். ஆனால் இவை அனைத்தும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் நிறைந்தது. இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் நாளடைவில் நமது சருமம் வயதான தோற்றத்திற்கு மாறி விடுகிறது. இதற்கு பதிலாக நமது வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களே நமது அழகை பராமரிக்க போதுமானது. பெரும்பாலான தோல் பிரச்சனைகளுக்கு துளசி, வேம்பு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களே போதுமானது. எனவே உங்கள் சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவும் இயற்கை பொருட்கள் குறித்து நாம் இங்கு காண்போம்., வேம்பு :  வேம்பில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி சரும அழகை பராமரிக்கவும் உதவுகிறது. இது சரும தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும், எரி

உலகின் விலைமதிப்பான மரம் இது தான்.. ஒரு கிலோ மரக்கட்டையின் விலை ரூ. 73,000.. வைரத்தை விட விலை கூடுதல்!

Image
  விலைமதிப்பு மிக்க இந்த அரிதான மரம் சிதைந்த பிறகும், அதன் எச்சங்கள் வாசனை திரவிய உற்பத்தியில் பெருமளவு உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் இதுவரை, உலகில் உள்ள விலை உயர்ந்த பொருள் வைரம் அல்லது தங்கம் என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதைக்காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று உள்ளதென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! இருக்கிறது, அதுதான் அகர் மரம். இது தங்கம், வைரம் மட்டுமல்ல உலகின் அரிய வகை நவரத்தினங்களைக் காட்டிலும் விலைமதிப்பு மிக்கது. அக்குலேரியா மரத்தின் வழிவகையில் வந்த இந்த அகர்மரம், கற்றாழை மரம் அல்லது கழுகு மரம் எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஜப்பான், அரேபியா, சீனா, இந்தியா, மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படும் இந்த அகர்மரம் தான், உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும். பிசினஸ் இன்சைடரின் கணக்குப்படி, ஒரு கிலோ அகர் கட்டைகள் அமெரிக்க டாலர் மதிப்பில் $1,00,000 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய மதிப்பில் ரூ. 73 லட்சம்ஆகும். நாட்டில் தற்போது ஒரு கிராம் வைரத்தின் விலை ரூ.3,25,000 ஆகவும் , 10 கிராம் தங்கத்தின

"Fridge For Sale".... புதிரான விளம்பரம் - நெட்டிசன்கள் புலம்பல்!

Image
  பிரிட்ஜ் மட்டும் தெரியவில்லை. என்னடா இது? பிரிட்ஜ் விற்பனைக்கு என போட்டோ போட்டிருக்கிறார்கள். பிரிட்ஜ் விற்பனைக்கு என பேஸ்புக்கில் போடப்பட்ட விளம்பரம், நெட்டிசன்களுக்கு புதிராக மாறியது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் நேரம்போவதே தெரியாது. 24 மணி நேரமும் உங்களை பிஸியாக வைத்திருக்கும். கூடுதலாக நேரம் இருந்தால் கூட பத்தாது என்ற அளவுக்கு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுவீர்கள். அந்தளவுக்கு, ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும், விளம்பரங்களும் குவிந்து கிடக்கின்றன. யூசர்களை மயக்குவதற்கென்றே சில வலைதளங்களும், கவர்ச்சிகரமான விளம்பரங்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக, பொருட்களை வாங்கவும், விற்கவும் பயன்படும் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற பிரபலமான தளங்களில் நீங்கள் விளம்பரங்களின் கிரியேட்டிவிட்டியை பார்க்கலாம். அதில் இருக்கும் சில டெக்னிக்கல் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் சிலர் தனியாகவும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தங்களுக்கான விற்பனை தளங்களாக பயன்படுத்துகிறார்கள். பிளிப்கார்ட், அமேசான் தளங்

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!