நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவில் இவ்வளவு ‘பெரிய’ பாலமா..?

பாம்பன் மேம்பாலம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். கடலுக்கு மேலாக, 2.2 கி.மீ. தூரம் அமைந்த பாம்பன் ரெயில் பாதையிலும், சாலை மேம்பாலத்திலும் பயணித்திருப்போம்.
இதை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் மேம்பாலங்கள் மிகச்சிறியதே. ஆனால் ‘பூபென் ஹசாரிகா’ மேம்பால கதையை கேட்டால், நம்ம ஊர் பாம்பன் மேம்பாலமும் மிகச்சிறியதாகவே தோன்றும். ஆம்..! பூபென் ஹசாரிகா மேம்பாலம், 9.2 கி.மீ. நீளமுடையது.

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டா நகரிலுள்ள தோலா பகுதி வரை 9.2 கி.மீ. தூரம் நீளக்கூடியது. இவ்விரு பகுதிகளையும் பிரிக்கும் பிரம்மபுத்திரா மற்றும் லோஹித் ஆறுகளுக்கு மேலாக இந்த மேம்பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அசாமின் பிரபல கவிஞரும், முன்னணி பாடகருமான மறைந்த பூபென் ஹசாரிகாவின் நினைவாக இந்தியாவின் மிக நீளமான இந்த பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!