நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காதலன் - காதலி சண்டை; செல்போனால் மண்டையை உடைத்த காதலி

 சிலருக்கு கோபம் உனர்ச்சி அதிகமாகும் போது ஆத்திரம் அடைந்து நிதானத்தையும், பொறுமையையும் இழந்து விடுவார்கள். 


சிலருக்கு கோபம் உனர்ச்சி அதிகமாகும் போது ஆத்திரம் அடைந்து நிதானத்தையும், பொறுமையையும் இழந்து விடுவார்கள். அதனால், மற்றவர் மனதை காயப்படுத்தும் வகையில் கடினமான வார்த்தைகளை கூட பயன்படுத்துவார்கள். எதிரில் உள்ளவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்றாலும் கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது. 

பல நேரங்களில் கோபத்தில், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்படும் வகையிலான காரியம் ஒன்றையும் செய்யலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, ஒரு படி மேலே போய் 22 வயதான ரோக்ஸானா அடெலினா லோபஸ் (Roxana Adelina Lopez) கோபத்தின் காரணமாக கொலை செய்ததால், இன்று சிறையில் வாடுகிறார்.

அர்ஜென்டினாவின் லா நேசியனில் வசிக்கும் ரோக்ஸானாவுக்கும் அவரது காதலன் லூயிஸ் கான்டே (Luis Guantay)என்பவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையில் காதலன் லூயிஸ் காதலியை தாக்கிய போது, அவள் பதிலுக்கு தன் காதலன் மீது தொலைபேசியை பலமாக வீசினாள். செல்போன் தலையில் பட்டதில் இருந்து லூயிஸ் என்பவருக்கு, தலைவலி மிகவும் அதிகமாகியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

லூயிஸை டாக்டர்கள் பரிசோதித்தபோது, ​​அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர் ஆனால், அவரை காப்பாற்ற முடியாமல் அவர் இறந்தார். இதன் பின்னர், லூயிஸின் தாயார் காவல்துறையை அணுகி, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இதை அடுத்த மேற்கொண்ட விசாரணையில், இவர்களுக்கு இடையிலான சண்டை மற்றும் அடிதடி குறித்த விஷயங்கள் அம்பலமாகின. இதை அடுத்து, ரோக்ஸானா அடெலினா லோபஸ் கைது செய்யப்பட்டார். காதலி தற்காப்புக்காக தான் தாக்கினார் என வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது, இது குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. தற்காப்புக்காக தாக்கியிருப்பதால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், கோபம் காரணமாக, சந்தோஷமான வாழ்க்கை பறிபோயுள்ளது. காதலன் உயிரை இழந்துவிட்ட நிலையில், காதலி சிறை வாசம் அனுவித்து வருகிறாள். 


also read : Girlfriend On Rent: இங்கே காதலி வாடகைக்கு கிடைப்பார்; விலை என்ன?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!