நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

IPL 2021: மனதை உருக வைத்த உத்தப்பா, நெகிழ்ந்த ரசிகர்கள், வீடியோ வைரல்

ராபின் உத்தப்பா ஒரு சிறந்த டீம் பிளேயர் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னால் முடிந்தபோதெல்லாம், முடிந்த விதத்தில் அவர் அணிக்கு தன் பங்களிப்பை அளிக்கிறார்.


 IPL 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ராபின் உத்தப்பா இன்னும் அணிக்காக ஒரு ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால், களத்தில் இறங்காமலேயே ஊத்தப்பா, சி.எஸ்.கே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துவிட்டார்.


ராபின் உத்தப்பா ஒரு சிறந்த டீம் பிளேயர் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னால் முடிந்தபோதெல்லாம், முடிந்த விதத்தில் அவர் அணிக்கு தன் பங்களிப்பை அளிக்கிறார். அதற்கு மற்றொரு சான்று சமீபத்தில் காணக் கிடைத்தது.


இந்த வார தொடக்கத்தில் சிஎஸ்கே (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டி முடிந்தவுடன், உத்தப்பா, எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பல உதவிகளை செய்வதைக் காண முடிந்தது.


உத்தப்பா தோனி மற்றும் ரெய்னாவின் பேட் மற்றும் ஹெல்மெட்டுகளை எடுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சிஎஸ்கே ரசிகர்கள் உத்தப்பாவின் டீம் ஸ்பிரிட்டை பாராட்டி வருகின்றனர்.


ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற அந்த வீடியோ இதோ:

Tweet

IPL-ன் முந்தைய பதிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கிய சி.எஸ்.கே அணி, IPL 2021-ல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


இந்த மாத தொடக்கத்தில் லீக் மீண்டும் தொடங்கியதில் இருந்து, தோனி (MS Dhoni) தலைமையிலான சி.எஸ்.கே படை, தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. வலுவான அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளை சி.எஸ்.கே அனாயாசமாக வீழ்த்தியது.


சி.எஸ்.கே அணியின் அட்டத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்கள் அணி மீண்டும் அசத்தல் ஆட்டத்தை ஆடத் துவங்கிவிட்டதால், சி.எஸ்.கே ரசிகர்கள் ‘கப்பு நமக்குதான்’ என்ற கெத்துடனே காணப்படுகிறார்கள்.


ALSO READ : மனித சக்தியையே மிஞ்சும் பொக்கிஷம்! தாராளமாய் திருப்பி கொடுத்த அமெரிக்கா!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!