நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பள்ளியில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள் - வீடியோ வைரலானதால் பணியிடை நீக்கம்

 ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிர்யர்கள் சிலர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி வகுப்பறையில் ஐந்து ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். 5 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீசுக்கு ஆசிரியர்கள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் திருப்தியாக இல்லாததால்,  ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே பாலிவூட் பாடலுக்கு நடனம் ஆடிய இளம்பெண் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால், இளம் பெண் மீது ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காக ராமர்-சீதா கோவிலின் வெளியே நடனமாடியதாக பஜ்ரங்தள் தலைவர் புகார் அளித்ததை அடுத்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!