நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மூக்கு வழியாக ஸ்பிரே : கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்யும் இங்கிலாந்து நிறுவனம்

 இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே மருந்தை உருவாக்கியுள்ள இங்கிலாந்தின் போக்ஸ்பயோ நிறுவனம், அம்மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போக்ஸ்பயோ என்ற இங்கிலாந்து நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியைப் பெற, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அது விண்ணப்பிக்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடுப்பு மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, இங்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என போக்ஸ்பயோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பு மருந்தை அதிகபட்ச ஆபத்தைக் கொண்டுள்ள 648 சுகாதார பணியாளர்களைக் கொண்டு சோதித்துப் பார்த்ததில் இது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் செயல்திறனைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக்கொள்ள முடியும். இது 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத்தரும் என சொல்லப்படுகிறது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் உப்பல் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது என்றபோதும், அது 100 சதவீதம் பயன் அளிப்பதில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா பாதிப்பு அபாயம் உள்ளது.

போக்ஸ்வெல் என்ற பெயரில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, தடுப்பூசி, சுய பாதுகாப்பு கருவிகளுடன் கூடுதல் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!