நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

McDonald's பர்கருக்குள் இலவச இணைப்பாக தேள்; சாப்பிட்டவர் நிலை என்னாச்சு..!!

 ஜெய்ப்பூரில் மாளவியா நகரில் உள்ள McDonald's உணவகத்தில், ஆசையாக பர்கர் சாப்பிட போனவர் நிலை மோசமாகியது.

துரித உணவுகளில் பலருக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று பர்கர். அதிலும் மெக்டொனால்ட்ஸ் பர்கர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், அப்படி ஆர்வமாக சாப்பிட போனவர் நிலை இன்று மோசமாக உள்ளது. 

ஜெய்ப்பூரில் மாளவியா நகரில் அமைந்துள்ள McDonald's உணவகத்தில், ஆசையாக பர்கர் சாப்பிட போனவர் நிலை மோசமாகியது.  பர்கர் சாப்பிடும் போது தேள் போன்ற புழு அதிலிருந்து வந்ததால் அங்கே பதற்றமான சூழ்நிலை உருவாகியது. ஒரு வாடிக்கையாளர் ஆவலாக தான் ஆர்டர் செய்த பர்கரை சாப்பிடும் போது, ​​தேள் போன்ற புழு அதில் இருந்ததால், அந்த இளைஞனின் உடல்நிலை மோசமாகி, ஜெய்புரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளைஞனின் உடல்நிலை இன்னும் மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற. அப்குதியில் உள்ள ஜவஹர் நகர் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், புகாரை திரும்ப பெறுமாறு காவல்துறையால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. ஏராளமான மக்கள் மெக்டொனால்டு உணவகத்திற்கு (McDonald's Restaurant) வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இனிமேல் எந்த உணவுப் பொருட்களிலும் புழு அல்லது விஷ பூச்சி வெளி வருவது போன்ற அதிர்ச்சி தரும்  சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை, புகார் கொடுத்தவருக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக,  மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு  எதிகாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் தருண் என்ற இளைஞன் பர்கரை சாப்பிடும் போது, தேள் போன்ற பூச்சிகளின் சில பகுதியும் வயிற்றுக்குள் போய்விட்டது. அப்போதிருந்து அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஜெய்புரியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். 


also read : சிலந்தியைப் போல் சுவற்றில் ஏறி அசத்தும் Spider Girl..!!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!