நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!

 பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பை கண்டால் பயப்படாதவர்களை பார்ப்பது அரிது. அதனை பற்றி நினைத்தாலே ஒரு வித அச்ச உணர்வு மனதில் பரவும். 

பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பை கண்டால் பயப்படாதவர்களை பார்ப்பது அரிது. அதனை பற்றி நினைத்தாலே ஒரு வித அச்ச உணர்வு மனதில் பரவும். உங்கள் வாழ் நாளில் பல வகை பாம்புகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அவை சண்டையிடுவதையும், வேட்டையாடுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் பாம்பு இரத்தத்தை வாந்தி எடுப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம், இங்கிலாந்தில் உள்ள ஷ்ரோப்ஷயர், (Shropshire) என்ற இடத்தில் இது நடந்தது. இங்கே ஒரு மலைப்பாம்பு சாலையில் ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தது.

 மலைப்பாம்பு இரத்தம் வாந்தி எடுப்பதைக் கண்ட மக்கள், அங்கிருக்கும் வனத்துறை அதிகாரிகளை உடனே தொடர்பு கொண்டதாக தி சன் பத்திரிகையில் வெளியான செய்தி அறிக்கை கூறுகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் இரண்டு பைக் சவாரிகள் மலைப்பாம்பை மீது பைக் ஏற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக அது பலத்த காயமடைந்து இரத்த வாந்தி எடுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.


செய்தி கிடைத்தவுடன், வனத்துறை அதிகாரிகள் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மலைப்பாம்பை, விலங்கு மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்கு அதற்கு வலி நிவாரணம் அளிக்கப்பட்டது ஆனால் காயமடைந்த மலைப்பாம்பின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. பரிதாபமாக இறந்து விட்டது.

அப்பகுதியில் பாம்பின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். மலைப்பாம்பை சாலையில் கண்ட நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த மலைப்பாம்பைத் தவிர, மற்றொரு பாம்பின் சடலம் சாலையில் கிடந்தது. சிலர் வேண்டுமென்றே கொன்று சாலையில் வீசுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


சமூக ஊடகங்களில் இந்த படம் வைரலானது. அதில் ஒருவர் இது குறித்து பதிவிட்ட கருத்தில், இதை பார்த்ததில் இருந்து எனக்கு வீட்டை விட்டு வெளியே வர பயமாக உள்ளது, என்னைப்போல் வேறு யாராவது இருக்கிறார்களா, அல்லது எனக்கு மட்டும் தான் பயமாக உள்ளதா என எழுதியுள்ளார். “என்னால் 6 அடி நீளமுள்ள பாம்புடன் வாழ முடியாது’ என கூறியுள்ளார். மற்றொரு நபர் அது உண்மையில் ஒரு கனவா என நினைக்க தோன்றுகிறது என்று கருத்து தெரிவித்தார். 


ALSO READ : உயிரை காவு வாங்கும் போன் நம்பர்! நீடிக்கும் மர்மம்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!