நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செக்ஸில் விபரீதம்.. மாடியில் இருந்து அரைநிர்வாணமாக கார் மீது விழுந்த இளம்பெண்!

 பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மேற்கூரை மீது அரை நிர்வாண பெண் விழுந்தாள்.

அரை நிர்வாணமாக பெண் ஒருவர் பால்கனியில் இருந்து காரின் மேற்கூரையில் விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அப்பெண் தன் காதலனுடன் உடலுறவு கொள்ளும்போது அந்த மாடியின் பால்கனியில் இருந்து விழுந்திருக்கிறார்.
சிசிடிவி காட்சிகளில் உள்ளபடி, அந்த இளம் பெண் அடுக்குமாடி கட்டிடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு செடான் காரின் மேல் விழுந்ததில், அந்தக் காரின் மேற்கூரையை அமுங்கி அப்பளமாக நொறுங்கியது.

தைவான் நாட்டின் தைபே நகரில் கடந்த செப்டம்பர் 5ம் தேதியன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. தனது பார்ட்னருடன் அப்பெண் உடலுறவு கொண்டிருந்த நேரத்தில் விபரீதமான செய்கையினால், துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
வீடியோ காட்சிகளில் இருந்து அந்த பெண்  மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவர் கடுமையான வலியில் இருப்பதாக தெரிகிறது. அவர் முதுகில் தேய்ப்பதை காண முடிந்தது. அப்போது ஒரு இளைஞன் அவருக்கு உதவி செய்ய ஓடி வந்ததாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளூர் ஊடகத்திடம் பேசுகையில்: "நான் வீட்டிற்கு செல்லும் வழியில் அச்சம்பவம் நடந்தது. அந்த பெண் கீழே விழுந்ததை நான் பார்க்கவில்லை, ஆனால் ஒரு பெரிய விபத்து நடந்து இருப்பதை உணர்ந்தேன். அவர் ஏற்கனவே காரின் மேல் இருந்தனர். ஒருவர் ஓடோடி வந்து அப்பெண்ணுக்கு உதவி செய்தான்" என தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான காரின் கூரையிலிருந்து அப்பெண்ணை அவரது காதலன் தான் மீட்டு உதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடிபட்டதில் பெண்ணிற்கு முதுகெலும்பில் லேசான காயங்கள் ஏற்பட்டு சில வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!