நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!

 முதலில் இது நம்பமுடியாததாக செய்தியாகத் தோன்றலாம் ஆனால் இந்த குறிப்பிட்ட நாணயத்திற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்க காரணம் உண்டு.


நம்மில் சிலருக்கு பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்கள் நல்ல லாபத்தைப் பெற சரியான தளத்தில் அதனை விற்கலாம். சமீபத்தில் அரிய நாணயம் ஒன்று ரூ .10 கோடிக்கு ஆன்லைன் ஏலத்தில் விற்கப்பட்டது. முதலில் இது நம்பமுடியாததாக செய்தியாகத் தோன்றலாம் ஆனால் இந்த குறிப்பிட்ட நாணயத்திற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்க காரணம் உண்டு.

இந்த ஒரு ரூபாய் நாணயம் சமீபத்தில் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது, ஏனெனில், இந்த அரிய நாணயம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது லாட்டரி சீட்டுக்கு குறையாமல் பணத்தை வாரித் தந்துள்ளது.

எனவே உங்கள் வீட்டில் உள்ள பழைய நாணயங்களை ஆராயவும். அதில் அரிய நாணயம் இருந்தால், உங்களுக்கும் ஏராளமான பணம் கிடைக்கும். மேலும் பழைய நாணயங்கள் மற்றும் நாணயங்களைச் சேகரிப்பதில் ஏதேனும் ஆராய்ச்சி செய்யலாம். ஏனெனில் ஒரு அரிய நாணயம் உங்களை ஓர் இரவில் கோடீஸ்வரர் ஆக்கலாம்.

பழைய மற்றும் அரிய நாணயங்களை விற்கும் பல வலைத்தளங்கள் உள்ளன. இந்த வலைத்தளங்களில் ஒன்று CoinBazar ஆகும், அங்கு பயனர்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யலாம். அதில தங்களிடம் உள்ள அரிய வகை காயின்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை விற்று எளிதில் பணக்காரர் ஆகலாம். 

முன்னதாக ஜூன் மாதம், 1933 ஆண்டின் அமெரிக்க நாணயம் ஒன்று, நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் 18.9 மில்லியன் டாலர்களுக்கு (அதாவது ரூ.138 கோடி) விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ : சிலந்தியைப் போல் சுவற்றில் ஏறி அசத்தும் Spider Girl..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!