நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

லைவ் நிகழ்ச்சியில் பி.பி.சி. செய்தியாளரை குப்புற விழ வைத்த நாய் – வைரல் வீடியோ

 செல்ஷாவில் நடைபெற்ற மலர் கண்காட்சி ஒன்றில் தன்னுடைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட காரோலுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து செய்தி அறையில் அமர்ந்திருக்கும் வர்ணனையாளர்கள் சிரிக்கும் காட்சியும் இந்த வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.


பி.பி.சி.யில் வானிலை அறிக்கை வாசிக்கும் செய்தியாளராக பணியாற்றி வரும் காரோல் கிர்க்வூட் தன்னுடைய நேரலை நிகழ்ச்சி ஒன்றின் போது நாயால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வானிலை அறிக்கையை கூறிய காரோல், செய்தி வர்ணனனையாளர்களான டான் வாக்கர் மற்றும் சாலி நுஜென்ட்டுடன் கெய்ட் நாய்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே இருந்த ஃப்ளாஷ் என்ற நாயை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசிக் கொண்டிருந்த போது நாய் அவரை விட்டு விலகி செல்ல முயன்றௌ அதன் கழுத்தோடு கட்டியிருந்த பெல்ட்டை பிடிக்க முயற்சி செய்து காரோல் கீழே விழுந்துவிட்டார்.


அவள் மிகவும் நன்றாக நடந்த் கொண்டாள் என்று தான் கூற வேண்டும் என்று ஃப்ளாஷ் குறித்து பேசிக் கொண்டிருக்கும் காரோல் அந்த நாய் மிகவும் அழகாக இருக்கிறது என்றும் கூறும் காட்சியில் அந்த நாயுடன் எவ்வளவு நெருக்கமாக அவர் இணைந்துவிட்டார் என்று வீடியோவில் தெளிவாக தெரிகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஃப்ளாஷ் செய்த செயல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செல்ஷாவில் நடைபெற்ற மலர் கண்காட்சி ஒன்றில் தன்னுடைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட காரோலுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து செய்தி அறையில் அமர்ந்திருக்கும் வர்ணனையாளர்கள் சிரிக்கும் காட்சியும் இந்த வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.


ALSO READ : 8 நாளில் ₹27 லட்சத்துக்கு பிரியாணி பில் - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!