நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இருளில் மூழ்கியுள்ள சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை.. அடுத்த ஆண்டு மார்ச் வரை மின்தடை ஏன்?

 அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் மின்வெட்டு பிரச்னை நீடிக்கலாம்.

சீனாவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்தடையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. விண்வெளியில் சாதனைகளை நிகழ்த்திய சீனா மின்னொளியில் மண்ணைக் கவ்வியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

சந்திரனின் இருண்ட பாகத்தில் முதன்முதலில் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த சீனா, கடந்த சில நாட்களாக இருளில் சிக்கித் தவித்து வருகிறது.

மின் பற்றாக்குறையால் ஒட்டு மொத்த மாகாணங்களும் முடங்கிப் போவதைத் தவிர்க்க, ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து சீனாவின் 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. முறை வைத்து விநியோகிக்கப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ள மின் தடையால் தெரு விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் என எதுவும் வேலை செய்யவில்லை. நெடுஞ்சாலையில் திடீரென விளக்குகள் எரியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் பகல் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே சமயம் இரவு நேரங்களில் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமலில் இருக்கும் என்பதால், அதற்குள் தங்கள் வேலைகளை முடிக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 20 மாடிகள், 30 மாடிகள் என உயர்ந்து நிற்கும் கட்டடங்களில் லிப்ஃட் வசதியின்றி குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.

மின்சாரம் இன்றி பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைப்பு அல்லது உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சில தொழிற்சாலைகள் வாடகை ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தியை தொடர்ந்தாலும், இது மின்சாரத்திற்கான செலவை இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவின் கட்டுமான வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்குப் பின் உலகம் சற்றே மீண்டெழுந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்டர்களை முடித்துத் தரவேண்டிய கட்டாயத்தில் சீன நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அதற்கு பெரும் சவாலாக இந்த மின் தடை உருவெடுத்துள்ளது. இதனால் செல்ஃபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் காற்று மாசைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நிலை நீடிக்கலாம் என்பதால் அதுவரை முறை வைத்து வழங்கப்படும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மக்களை மாகாண நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. அலுவலகங்களில் மூன்று மாடிகள் வரை லிஃப்ட்களை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் இயற்கையான ஒளியை பயன்படுத்துமாறும், குறைந்த அளவில் குளிர்சாதன வசதியை உபயோக்கிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மின்தடை சீனாவின் பொருளாதாரத்தை இருளில் தள்ளிவிடும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சீன பொருளாதாரம் 4,4 லிருந்து 3 சதவீதமாக குறையும் என தனது கணிப்பை மாற்றியிருக்கிறது ஜப்பானின் நொமுரா நிதி நிறுவனம். சீனாவில் ஏற்பட்டுள்ள மின் தடை உலகச்சந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் மின் தடையிலிருந்து சீனா மீளும் நாளை எதிர்நோக்கி எல்லோரும் காத்திருக்கின்றனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!