நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு… இந்த நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளுங்கள்..!

 பருப்பு வகைகள் புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால் அவற்றில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.


சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். நார்ச்சத்து உணவுகள் செரிமானமாக நேரமெடுக்கும். இதனால் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்ட ஒருவர் நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக உணர்வார். நார்சத்து மனித செரிமான அமைப்பில் இருக்கும் நொதிகளால் எளிதில் உடைக்க முடியாத தாவர அடிப்படையிலான உணவின் ஒரு பகுதியாகும். மனித உடலால் நார்சத்து உறிஞ்சப்படும் போது, அது தேவையற்ற உணவை உங்கள் உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகளை பொறுத்தவரை, இது பெருங்குடல் பகுதி மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக ஒரு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் மற்றும் மலத்தை வெளியேற்றுவதால் ஏற்படும் வலி போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது. அதன் ஏராளமான செரிமான நன்மைகளைத் தவிர, ஒருவரது டயட்டில் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் அவை எடை இழப்பு முயற்சிக்கு உதவுகிறது.

மேலும், நல்ல  இதய ஆரோக்கியத்தை  மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் பக்கவாத அபாயத்தை நார்சத்து உணவுகள் வெகுவாகக் குறைக்கின்றன. இரத்த சர்க்கரை அளவை இது ஒழுங்குபடுத்துகிறது. இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த உணவுகளை தற்போது ஆரம்பித்துள்ள மழைக்காலத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில், மழை காலங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இதனை தடுக்க, ஒருவர் தங்களது தினசரி டயட்டில் இந்த முக்கியமான நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றை பற்றி பின்வருமாறு காணலாம்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவும். வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த மூலமாகும். இந்த சுவையான வாழைப்பழத்தை அப்படியே கூட சாப்பிடலாம். அல்லது ஓட்ஸில் கலந்து சாப்பிடலாம். இல்லையெனில் வாழைப்பழ ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.

ஓட்ஸ்:

நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக ஓட்ஸ் கருதப்படுகிறது. ஓட்ஸ் உப்மா முதல் ஓட்ஸ் கிரானோலா பார்கள் வரை பல்வேறு வழிகளில் ஓட்ஸினை உணவில் சேர்க்கலாம். அல்லது சாதாரணமாக ஓட்ஸ் கஞ்சி வைத்தும் குடிக்கலாம்.

பருப்பு:

பருப்பு வகைகள் புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால் அவற்றில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பருப்பு வகைகளில் கார்போஹைட்ரேட்டுகளுடன் காணப்படும் நார்ச்சத்து உங்கள் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் மனதையும் உடலையும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!