நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடேங்கப்பா! 50 பைசாக்கு மதிப்பு இவ்ளோவா?

 சமீபகாலமாக ஆன்லைன் மார்க்கெட்டில் பழைய நாணயங்களுக்கு பயங்கரமாக டிமாண்டை உருவாகியுள்ளது.


சமீபகாலமாக ஆன்லைன் மார்க்கெட்டில் பழைய நாணயங்களுக்கு பயங்கரமாக டிமாண்டை உருவாகியுள்ளது.  பழைய நாணயங்கள், அரிய நாணயங்கள், பழைய நோட்டுகள் ஆகியவை ஆன்லைனில் ஆச்சர்யமூட்டும் விலைக்கு விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், பழைய 50 பைசா நாணயம் ஒன்று 15000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கீவ் தோட்டத்தில் இருக்கும் சீன பகோடா பொறிக்கப்பட்டிருக்கும்.  கீவ் தோட்டம் தொடங்கப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவானதை குறிக்கும் வகையில் 210,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது.

இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் மிக அரிதானவை. எனவே, நாணங்களை சேகரிப்போர் இவற்றை குறிவைத்து தேடி வருகின்றனர்.  மிக அரிய நாணயம் என்பதால் இந்நாணயங்கள் அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றன.


இந்நிலையில், eBay தளத்தில் இந்த 50 பைசா அரிய நாணயம் விற்பனைக்கு வந்தது. அப்போது 37 பேர் விலை கேட்டனர். சரியாக மூன்று நாட்களுக்கு ஏலம் நடைபெற்றது.  இறுதியில் 142 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 15000 ரூபாய்) 50 பைசா நாணயம் விலை போனது. மேலும், அந்த அரிய நாணயத்தை விற்பவர் இலவசமாகவே டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளார்.


ALSO READ : ஜொலிஜொலிக்கும் வைரத்தின் வியக்கவைக்கும் பிண்ணனி!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!