நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செல்ல நாய்க்கு அடித்த யோகம்; விமானத்தில் ‘சொகுசு’ பயணம்

 ஆண்டாண்டு காலங்களாக, நாய்கள் மிகவும் நன்றியுள்ள பிராணி என்றும் 'நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்'  என்று கூறப்படுகிறது.

ஆண்டாண்டு காலங்களாக, நாய்கள் மிகவும் நன்றியுள்ள பிராணி என்றும் 'நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்'  என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல, செல்ல நாய் எனது உயிருக்கு உயிரானது என்று எடுத்துரைக்கும் வகையில் ஒரு வினோதமான சமபவம் நிகழ்ந்துள்ளது.

 தனது நாயை விட்டு பிரிய விரும்பாத ஒருவர், தனது செல்ல நாய்க்காக, விமானத்தின், அதிக கட்டணம் உள்ள சொகுசு வகுப்பான பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் முழுவதையும் வாங்கி விட்டார். ஆம், இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவத்தில், மும்பையில் இருந்து சென்னைக்கு பயணித்த ஒருவர், 2.5 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து தனது செல்லமான வளர்ப்பு நாயுடன் பயணிக்க ஏர் இந்தியா விமானத்தின் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் முழுவதையும் வாங்கி விட்டார்.

விமானத்தின் பிஸினஸ் கிளாஸில் சுகமாக பயணிக்கும் வாய்ப்பைப் பெற்ற அதிர்ஷ்ட வளர்ப்பு நாய், ஒரு மால்டிஸ் பனிப் பர்பால் (Maltese snowy furball) வ்கை நாய் ஆகும். நாயும் அதன் எஜமானரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானமான AI-671 விமானத்தில் ஏறினர்.

மும்பையில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை ஏர் இந்தியா விமானத்தின் ‘J’ அல்லது பிஸினஸ் கிளாஸ் என்னும் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது, இதனால் தனது எஜனமானருடன்  ‘ஆடம்பரமாக மற்றும் சொகுசாக’  அந்த செல்ல நாய் பயணம் செய்தது. Airbus A320 என்ற இந்த விமானத்தில் 12 பிஸினஸ் கிளாஸ் வகுப்பு இருக்கைகள் இருந்தன.

மும்பையிலிருந்து சென்னைக்கு இரண்டு மணி நேர விமானத்தில் பயணம் செய்வதற்கான  பிஸினஸ் கிளாஸ் கட்டனம், டிக்கெட்டுக்கு ரூ .18,000 முதல் ரூ .20,000 வரை செலவாகும். தற்போது, ​​ஏர் இந்தியா சில நிபந்தனைகளின் கீழ் செல்லப்பிராணிகளை அதன் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கிறது.


ALSO READ : ஏலத்தில் 50 லட்சம் ரூபாய் சம்பாதித்த அரிய நாணயம்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!