நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜியோமியின் ஸ்மார்ட் கண்ணாடி

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்த கண்ணாடி மூலம் புகைப்படம் எடுக்கலாம், தகவல்களை மொழிமாற்றம் செய்து படிக்கலாம், ஸ்மார்ட்போனுக்கு அழைப்பு மேற்கொள்ளலாம். 

இது வழக்கமான கண்ணாடியைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மைக்ரோ எல்.இ.டி. ஆப்டிகல் வேவ் கைடு தொழில்நுட்பம் உள்ளது. இது திரையில் எழுத்துகள், அறிவிப்புகள் தோன்ற உதவுகிறது. பார்க்கும் காட்சிகளை புகைப்படம் எடுக்க உதவுகிறது. 

இதன் எடை 51 கிராம். புகைப்படம் எடுக்கும் வசதி இருப்பதால் இதில் பார்க்கும் காட்சிகள் மட்டுமின்றி படிக்கும் புத்தக பக்கங்களையும் புகைப்படம் எடுக்க முடியும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!