நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலுமிச்சை சாறில் ஏன் உப்பு கலந்து குடிக்க வேண்டும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

எலுமிச்சை பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. மனிதர்களை பாதிக்கும் எல்லாவித நோய்களுக்கும் ஒரு மாற்று மருந்தாக எலுமிச்சை பழம் செயல்பட்டு வருகின்றது.

எலுமிச்சை சாறில் சர்க்கரை கலந்து குடிப்பதால் பல நன்மைகளை கிடைப்பது உப்பு கலந்து குடிப்பதாலும் பல நன்மைகளை தருகிறது. எவ்வளவு சோர்வாக இருந்தாலும் எலுமிச்சை சாறை குடித்தால் உடனடியாக புத்துணர்ச்சியை பெறலாம்.

எடையை குறைக்க காலையில் எலுமிச்சை தண்ணீர் சிறந்த பானமாக பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கிடையில் எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

உடலில் உள்ள நச்சுக்களை போக்க இந்த பானம் உதவுகிறது. எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க உதவியாக இருக்கிறது.
இரவில் சரியான தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ தூங்கும் முன் எலுமிச்சையோ சாறில் உப்பு கலந்து குடித்து வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு சரியான தூக்கத்திற்கு வழிவகிக்கின்றது.
நீரிழிவு நோயில் கஷ்டப்படும் மக்கள் தினமும் உப்பு கலந்த எலுமிச்சை சாறை குடிப்பதால் சிறந்த பலனை கொடுக்கும். உப்பில் இருக்கும் எதிர்மறை அயனிகள் இதயத்துடிப்பை சீராக்குகிறது.
எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகள் நீக்கி உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். இதனால் உடலில் சேர்ந்துள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!