நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மூளையை Upgrade செய்ய முடியுமா? இந்த எளிய டிப்ஸ் அதற்கு உதவும்

 காலப்போக்கில் பல காரணங்களால், மூளையின் செயல்திறன் குறைவது வழக்கமான ஒன்றாகும். மூளையை மேம்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா?


மனித உடலின் செயல்பாடு மூளையை பெரிதும் சார்ந்துள்ளது. தகவல் மற்றும் தரவை நன்று ஆய்வு செய்த பிறகு, எந்த வகையான வேலையைச் செய்ய வேண்டும் என்று உடலின் பல்வேறு பகுதிகளுக்கு மூளை கட்டளைகளை அளிக்கின்றது.


இருப்பினும், காலப்போக்கில் பல காரணங்களால், மூளையின் (Brain) செயல்திறன் குறைவது வழக்கமான ஒன்றாகும். மூளையை மேம்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? ஆம்!! வழி இருக்கிறது. எந்த வயதிலும் மனதை கூர்மையாக்கி மேம்படுத்த சில நல்ல வழிமுறைகள் உள்ளன.


மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விளையாட்டுகளை விளையாடுவது:

கற்றலின் ஆரம்ப கட்டங்களில், குழந்தைகளுக்கு (Children) பெரும்பாலும் புதிர்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது அவர்களின் அடிப்படை புரிதல் வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். இருப்பினும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் செயல்முறை வாழ்க்கையின் பிற்கால கட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவியல் பரிந்துரைக்கிறது.

புதிர்கள், சீட்டு விளையாட்டுகள், வினாடி வினாக்கள் போன்ற மன விளையாட்டுகள் மனதை ஈடுபடுத்தி அதன் பயிற்சியை ஊக்குவிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மன விளையாட்டுகள் (Mental Games) பகுப்பாய்வு திறன்கள், நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்தும்.


பல மொழிகளைக் கற்பது:

இரு மொழிகளில் (Language) பேசுவது மூளைக்கு அதிக வேலையைத் தந்து அதை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதில் இருமொழிப் பயன்களின் நன்மைகளை பல ஆராய்ச்சிகள் ஆதரிக்கிறன. பப்மெட் சென்ட்ரலில் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வின் படி, இருமொழி பயன்பாடு, படைப்பாற்றல், கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும். வயது தொடர்பான நினைவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தையும் இது குறைக்கும்.


இசையைக் கற்பது:

பியானோ கலைஞர் சிக்கலான இசை குறிப்புகளை வியக்க வைக்கும் வேகத்தில் வாசிப்பதும், கிதார் கலைஞர் அற்புதமாக பல டியூன்களை வாசிப்பதும், மூளையின் ஆற்றலால்தான். 

ப்ளோஸ் ஒன்னில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, இசை படைப்பாற்றல், மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. இசைக் கருவிகளை வாசிப்பது ஒரு அற்புதமான திறனாகும். இது, கற்றல், நினைவாற்றல் மற்றும் மூளையின் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த உதவும்.


தியானம்:

பழங்காலத்திலிருந்தே தியானம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மனதை அமைதிப்படுத்தி, உடலை தளர்த்தும் திறன் காரணமாக இது இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது.

ஆராய்ச்சியின் படி, தியானம், தகவலை செயலாக்கும் திறன், மன நிலை அபாயத்தை குறைத்தல் மற்றும் உணர்ச்சிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.


ALSO READ : பளபளப்பான சருமத்தை பெற இதை செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!