நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா? காலையில் எழுந்ததும் இந்த அற்புத பானங்களை குடிங்க போதும்!

பொதுவாக காலை நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளதோ அந்த அளவிற்கு நாள் முழுவதும் உங்களது உடல் சுறுசுறுப்பாக இயங்கும். 

ஏனெனில் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்போதுதான் உடலுக்கு தேவையான நோய் ஏதிர்ப்பு சக்தியை கிடைக்க செய்யும்.

அதிலும் ஒரு சில இயற்கை பானங்களை எடுப்பது உடலுக்கு இன்னும் வலிமையையும் பலத்தையும் தரும்.

அந்தவகையில் தற்போது காலையில் எடுத்து கொள்ளக்கூடிய முக்கியமான அற்புத பானங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் கொழுப்புகளை குறைக்க உதவும். உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி நெல்லி சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நெல்லி சாறு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.   
 
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்க காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சை தேன் உடல் எடை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் வயதான தோற்றத்தை மாற்றவும், சருமத்திற்கு அதிகப்படியான நன்மைகளையும் தருகிறது.  

 ஒரு தேக்கரண்டி சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து, வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இந்த நீர் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!