நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹாங்காங்கின் அடையாளம்.. கடலில் மூழ்கியது உலகப்புகழ் பெற்ற ஜம்போ மிதக்கும் உணவகம்!

 ஹாங்காங்கில் உலகப்புகழ் பெற்ற புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது.

ஹாங்காங்கில் இருந்த ஜம்போ மிதக்கும் உணவகம் அந்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உள்ளிட்டோர் உள்ளிட்ட உலக பிரபலங்கள் உணவருந்திய உணவகமாக திகழ்ந்ததோடு, பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் இந்த மிதக்கும் உணவகம் இடம்பெற்றிருந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக திகழ்ந்த ஜம்போ மிதக்கும் உணவகம், கொரோனா பெருந்தொற்றால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியது. இதையடுத்து கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜம்போ மிதக்கும் உணவகம் மூடப்பட்டு அதில் பணியாற்றிவந்த அனைத்து பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் உணவகத்தை பராமரிக்க ஆகும் செலவை சமாளிக்க இயலாததால், மிதக்கும் உணவகம் கடந்த 14-ம் தேதி ஹாங்காங்கில் இருந்து புறப்பட்டது. இந்த நிலையில் தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் கடைசியில் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!