நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு விரலில் 129.5 கிலோ எடையை தூக்கிய நபர் - 10 ஆண்டுகால உலக சாதனை முறியடிப்பு

 ஒருவர் ஒரு விரலால் இந்த அளவு எடையைத் தூக்குவது சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஸ்டீவ் கீலர் என்பவர். தனது வலது நடு விரலால் 129.5 கிலோ எடையைத் தூக்கி அசத்தியிருக்கிறார் அவர்.


இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பாடிபில்டர் தனது ஒற்றை விரலால் அதிக பழுவைத் தூக்கி சாதனைப் படைத்திருக்கிறார்.

வீட்டுக்குத் தண்ணீர் கேன் தூக்கிக் கொண்டு வந்தாலே மூச்சிரைக்க கண்ணாடியில் ஆர்ம்ஸ் செக் செய்யும் நமக்கு இது மிக ஆச்சரியமான செய்திதான்.

ஒருவர் ஒரு விரலால் இந்த அளவு எடையைத் தூக்குவது சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஸ்டீவ் கீலர் என்பவர்.

தனது வலது நடு விரலால் 129.5 கிலோ எடையைத் தூக்கி அசத்தியிருக்கிறார் அவர்.

தற்காப்புக் கலைகளைத் தனது தொழிலாகக் கொண்ட ஸ்டீவ் கடந்த 10 ஆண்டுகளாக யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்த சாதனையை முறியடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

கீலர் தூக்கிய பழுவில் மொத்தமாக 6 வட்ட டிஸ்குகள் இருந்தன. ஒன்று 10 கிலோ எடையும், ஒன்று 20 கிலோ எடையும், மூன்று தலா 25 கிலோ எடையும், ஒன்று 26 கிலோவுக்குச் சற்று அதிகமான எடையும் கொண்டது.
இந்த வட்டுகளை ஒன்றாக அடுக்கித் தூக்கியதன் மூலம் உலக சாதனையை முறியடித்தார் கீலர்.

கின்னஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி ஸ்டீவ் கீலரின் வயது 46. அவர் தனது 18 வயது முதல் ஜூடோ, கராத்தே போன்றவற்றை கற்று வருகிறார். இந்த பயிற்சிகள் அவர் உலக சாதனை படைப்பதற்கு உதவின என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த 4 ஆண்டுகளாக கைக்கு பலமளிக்கும் பயிற்சிகளையும் செய்து வருகிறார் கீலர்.

உலக சாதனையாளனாக அங்கீகரிக்கப்பட்ட கீலர் கின்னஸில், “இது தாங்க முடியாத அளவு வலி மிகுந்ததாக இருந்தது. ஆனால் என் விரல்கள் பலம் வாய்ந்தவை. நான் இது குறித்து பெருமைப்படுகிறேன்." என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த சாதனை பென்னிக் இஸ்ரேலியன் எனும் அர்மெனிய நாட்டைச் சேர்ந்தவரிடம் இருந்தது. அவர் கடந்த 2011ம் ஆண்டு தனது நடு விரலால் 116 கிலோ எடையைத் தூக்கி சாதனைப் படைத்தார்.

இந்த சாதனையை தனது வளர்ப்பு தந்தைக்கு சமர்பிப்பதாக கீலர் கூறியுள்ளார். தந்தை தான் இவருக்கு ஹீரோவாம்!





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!