நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தை அழுக்கின்றி பொழிவாக வைத்து கொள்ள வேண்டுமா? அப்போ புதினாவை இப்படி பயன்படுத்தி பாருங்க.....

 பொதுவாக புதினா ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு கீரையாகும்.

புதினாவானது பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் உணவு பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதினாவானது ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரையாகும்.

அதுமட்டுமின்றி இது சரும அழகிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

அந்தவகையில் தற்போது இதனை எந்த பொருளுடன் பயன்படுத்தினால் நன்மையை தரும் என்று பார்ப்போம்.  


தேவையான பொருட்கள்:


  • புதினா இலைகள் - 6-7
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை


  •  புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

  • பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

  • பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.

  • ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

  • இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!