நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாழை இலையில் உணவு உண்பதால் இவ்வளவு நன்மைகள் உண்டா?

 வாழை மரத்தில் இருந்து கிடைக்கின்ற பட்டை, பூ, தண்டு, பழம், காய் போன்ற அனைத்தும் பல மருத்துவ குணங்களை அடக்கியுள்ளது.

வாழை மரத்தில் இருந்து கிடைக்கின்ற வாழை இலைகளை நம் முன்னோர்கள் உணவு சாப்பிட பயன்படுத்தி வந்தனர்.

அப்படியான அந்த வாழை இலைகளில் உணவு சாப்பிடுவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது.

அந்தவகையில் வாழை இலையில் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.


  • வாழை இலையில் தினமும் உணவு உண்டு வந்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தையும் நீக்கி உங்கள் இரத்தத்தினை சுத்தமாக்கும்.

  • நாம் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் நமது செரிமான மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

  • அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் விரைவில் நல்ல மற்றம் காண முடியும்.

  • வாழை இலையில் உணவு உண்டால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். மேலும் உங்களுக்கு னாய் வராமல் தடுக்கும்.  

  • வாழை இலையில் உணவு உண்பது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது உங்களுக்கு சிறுநீரக கற்கள், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் முற்றிலுமாக தடுக்க உதவும்.

  • வாழை இலையில் பலிபீனால்ஸ் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதில் நாம் உணவினை உண்டு வரும்பொழுது நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் நமக்கு ஏற்படும் செல் அழிவினை தடுத்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

  • வாழை இலையில் உணவினை பரிமாறி உண்ணும்பொழுது உங்கள் உணவின் ருசி அதிகரிக்கும். 

  • வாழை இலையில் உணவினை உண்டு வந்தால் உங்களுக்கு ஆரோக்கியம் ஏற்படுவது மட்டுமின்றி உங்கள் சுற்று சூழலும் பாதிப்படையாமல் காக்கும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!