நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகம் பிரகாசமாக வைத்திருக்க வேண்டுமா? அப்போ பால் ஆடையை இந்த பொருட்களுடன் பயன்படுத்தி பாருங்க!

 பொதுவாக பால் உடலுக்கு எப்படி சக்தியைக் கொடுக்கிறதோ, அப்படியே நம் சரும அழகுக்கும் பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முகம் பொன் நிறத்தைப் பெற, முகத்தில் பால் ஆடை தடவி வந்தால், பலன் அதிகம் கிடைக்கும். இது தவிர, மேலும் பொலிவு பெற, இந்த பால் ஆடையில் சில பொருட்களைக் கலந்து முகத்தில் தடவினால் பலன் கிடைக்கும்.

அந்தவகையில் முகத்தில் எப்படி பால் ஆடையை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.


  • முகம் பொலிவு பெற, 1 டீஸ்பூன் பால் ஆடையில், 1 டீஸ்பூன் கடலைமாவை கலக்க வேண்டும். இதை கலந்த பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் 20 நிமிடங்கள் தடவவும். இந்த பேஸ்ட்டினால் உங்களுக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். 

  • ஒரு ஸ்பூன் பால் ஆடை எடுத்து, லேசாக கைகளால் முகத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதுவும் உங்களுக்கு நிச்சயம் பலன் தரும். அதேபோல் உங்கள் சருமம் மிகவும் வறண்டு இருந்தால் நீங்கள் கட்டாயம் பால் ஆடை பயன்படுத்த வேண்டும்.

  •  ஒரு ஸ்பூன் பால் ஆடை எடுத்து, லேசான கைகளால் முகத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது தோலில் உள்ள அனைத்து டெட் செல்களையும் அகற்ற உதவுகிறது.

  • பால் ஆடையில் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவவும். முகத்தில் 10 நிமிடம் விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும்.

  • முகப்பருக்கள் நம் முகத்தின் அழகைக் குறைக்கிறது. அதை சரிசெய்ய நீங்கள் பால் ஆடை பயன்படுத்தலாம்.

  • பால் ஆடையில் வயதான எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக, முகத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாது.  





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!