நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Whatsapp குரூப் அட்மின்களுக்கு டபுளாக அள்ளிக் கொடுத்த மெட்டா!

 WhatsApp Update | இனி வாட்ஸ்அப் குழுவில் உள்ள அட்மின்கள் இனி தங்களது குழுவில் 512 உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம்.


2014ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவால் கையகப்படுத்தப்பட்டதில் இருந்தே ‘வாட்ஸ்அப்’ பல்வேறு வகையிலும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. சாட்டிங், வீடியோ கால், வாய்ஸ் கால், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்வது போன்ற பல்வேறு தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.

உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்திவரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் தன்னுடைய சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்தி வருகிறது. கடந்த மாதம் கூட வாட்ஸ்அப் காலில் 30 பேர் வரை இணைத்து பேசக்கூடிய வசதி, குழு அட்மின்களுக்கு குழுவில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியையும் நீக்கும் சிறப்பு அதிகாரம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மெசேஜ்களுக்கு இமோஜிக்கள் மூலமாக எதிர்வினை ஆற்றும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூஸர்கள் மெசெஜ்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக ஹார்ட், ஸ்மைலி போன்ற ஈமோஜிக்களை பயன்படுத்தலாம்.

தற்போது மீண்டும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அதில் இனி வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை டபுளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா யூஸர்களுக்கு மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது இது அனைவருக்குமானதாக மாற்றப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குழுவில் உள்ள அட்மின்கள் இனி தங்களது குழுவில் 512 உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு முன்னதாக 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதற்கான அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா யூஸர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், ஒரு குழுவில் 512 உறுப்பினர்களை சேர்ப்பதற்கான செயல்முறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்...

ஒரு வாட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி?

1. வாட்ஸ்அப்பை ஓபன் செய்யுங்கள்.

2. திரையின் மேல் வலது புறத்தில் தேடல் ஐகானுக்கு அருகே காட்டப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

3. அதில் New Group என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

4. புதிய குழுவை உருவாக்க, உங்கள் தொலைபேசி தொடர்பு பட்டியலில் இருந்து 512 உறுப்பினர்களைச் சேர்க்கவும்

5. குழுவின் அட்மின் என்ற முறையில் Disappearing Messaging ஆப்ஷனை ஆக்டிவேட் செய்யலாம்.

6. இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட குழுவில் 512 உறுப்பினர்களுடன் இருப்பீர்கள்.

வாட்ஸ்அப் சில அப்டேட்களில் பிற ஆப்ஸ்களை விட மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக அதன் போட்டி நிறுவனமான டெலிகிராம் ஏற்கனவே ஒரு குரூப்பில் 2 லட்சம் வரை உறுப்பினர்களை சேர்க்க அனுமதி அளித்துள்ளது. மேலும் இது பெரிய அளவிலான கோப்புகளை பகிர்ந்துகொள்ளவும் அனுமதி அளிக்கிறது. ஆனால் சமீபத்தில் தான் வாட்ஸ்அப் 2 ஜிபி அளவிலான கோப்புகளை ஷேர் செய்வதற்கான அப்டேட்டை தனது யூஸர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!