நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

இந்த கோங்குரா சிக்கன் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
புளிச்சக்கீரை சற்று புளிப்பாக இருப்பதால், இந்த சிக்கன் மசாலா சற்று புளிப்பாக சூப்பராக இருக்கும்.


தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 1/2 கிலோ

 வெங்காயம் - 2 

தக்காளி - 1 

பச்சை மிளகாய் - 4 

(கீறியது) இஞ்சி - 1 

இன்ச் பூண்டு - 6 பல் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

 நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 உப்பு - சுவைக்கேற்ப 

வறுத்து அரைப்பதற்கு... 

வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 

மல்லி - 1 டேபிள் ஸ்பூன் 

வரமிளகாய் - 4 

சோம்பு - 1 டீஸ்பூன் 

கோங்குரா மசாலாவிற்கு...

 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

 பூண்டு - 4 பல் 

புளிச்சக்கீரை - 2 கப் 

உப்பு - சுவைக்கேற்ப 

செய்முறை: 

* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 * சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

 * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 5-ஜ நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

 * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் கோங்குரா கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, 3-4 நிமிடம் மசாலாவில் கோங்குரா கீரையை மென்மையாகும் வரை வதக்க வேண்டும். 

* கீரை நன்கு வெந்ததும், அதை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் தயார்.

 * இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!