நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கல்லறை கட்டி இன்டர்நெட் எக்ஸ்புளோருக்கு அஞ்சலி: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!

 இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தென் கொரிய பொறியாளர் கல்லறையை உருவாக்கியுள்ள நிலையில், அதுத் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


உலகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக முதன்மை இணையதள உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரரை பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இனி ஆதரிக்க போவது இல்லை என இந்த வாரம் அறிவித்தது.

இந்தநிலையில், பொறியாளர் கியோங் ஜங் தென்கொரியாவில் உள்ள கியோங்ஜூவில் உள்ள ஓட்டலின் மேற்கூரையில்( rooftop) உலாவியின் 'e' என்ற லோகோ பொறிக்கப்பட்ட கல்லறையை $330 டாலர்கள் செலவு செய்து ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த கல்லறையில், ”மற்ற உலாவிகளை பதிவிறக்குவதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நல்ல கருவியாக இருந்தது” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது.

பொறியாளர் கியோங் ஜங் இந்த கல்லறையை தென் கொரியாவின் தெற்கு நகரமான கியோங்ஜூவில் உள்ள அவரது சகோதரர் நடத்தும் ஓட்டலில் இடம்பெறச் செய்துள்ளார்.

இதுத் தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள கூற்றில், இந்த கல்லறை இணையதள மென்பொருள் குறித்த கியோங் ஜங்கின் கவலை உணர்வை பிரதிநிதித்துவபடுத்துகிறது, மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அவரதுதொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என தெரிவித்துள்ளது.

மேலும், இது மனவலி, ஆனால் நான் அதை காதல் மற்றும் வெறுப்பு உணர்வுடன் கலந்தது என அழைப்பேன்,ஏனெனில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒரு காலத்தில் இணைய உலகை ஆதிக்கம் செலுத்தியது என கியோங் ஜங் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.  



ALSO READ : மெயில் மூலம் நடக்கும் ஓன்லைன் மோசடி! சிக்காமல் இருக்க இப்படி செய்யுங்கள்......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!