நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் இந்த தண்ணீரை 1 டம்ளர் குடித்து வந்தால், உங்கள் அழகும் இளமையும் ஆரோக்கியமும் நிரந்தரமாக அப்படியே இருக்கும்.

ஒரு மனிதனுக்கு அழகும் ஆரோக்கியமும் இளமையும் நிலையாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எப்போதுமே கவலைப்பட்டுக் கொண்டு மன கவலையோடு துன்பத்தோடு துயரத்தோடு இருப்பவர்களுக்கு இளமையுடன், ஆரோக்கியமும் சேர்ந்து சீக்கிரம் காணாமல் போய்விடும். எப்போதுமே சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அழகோடு சேர்ந்த ஆரோக்கியம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இதில் மறைந்திருக்கும் உண்மை நம்மில் நிறைய பேருக்கு தெரிவதில்லை.
முதலில் எந்த துன்பம் வந்தாலும், எவ்வளவு சீக்கிரத்தில் அந்த துன்பத்தில் இருந்து வெளிவர முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் வெளிவந்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இது தான் முதல் வழி. இதை அடுத்து தினந்தோறும் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடிக்க வேண்டும். அது எந்த தண்ணீர்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பெரிய பெரிய டம்ளரில் தண்ணீரை அளந்து கொள்ளுங்கள். புதினா இலைகள் – 15, 
லேசாக இடித்த ஏலக்காய் – 5 ,
 சீரகம் – 1/2 ஸ்பூன், 
பட்டை – 1 சிறிய துண்டு, 
இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக போட்டு 10 நிமிடங்கள் வரை இந்த தண்ணீரை தளதளவென கொதிக்கவைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இந்த தண்ணீர் வெதுவெதுப்பாக ஆறிய பின்பு அப்படியே குடித்து விடலாம். உங்களுக்கு இதில் இனிப்பு சுவை தேவை என்றால் கொஞ்சமாக தேன் கலந்து குடிக்கலாம். கூடுமானவரை இனிப்பு சுவைக்கு எந்த பொருளையும் சேர்க்காமல் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் டீ காபிக்கு பதிலாக வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகி வர உங்களுடைய அழகு மேம்படும்.

அதாவது சருமம் பளபளப்பாக மாறும். மாநிறத்தில் இருப்பவர்கள் சீக்கிரமாக வெள்ளையாக மாறுவார்கள். கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருப்பவர்கள் படிப்படியாக அவர்களுடைய நிறத்தில் மாற்றத்தைக் காணலாம். வெள்ளையாக இருப்பவர்கள் இன்னும் ஜொலிக்க தொடங்கலாம். தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைக்க பயன்படுத்தக் கூடிய பொருட்கள் எல்லாமே, நம்முடைய அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கூடிய பொருட்கள் தான். எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
14 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் எல்லோருமே இந்த குறிப்பை பின்பற்றி வரலாம். ஒரு வாரம் குடித்து விட்டு உடனடியாக பலனை எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி வரும் போது, உங்களுடைய உடம்பிலும் சருமத்திலும் நிச்சயம் நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். கூடவே பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள், நட்ஸ் வகைகள் என்று ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை சாப்பிட்டு வரவேண்டும். ட்ரை பண்ணி பாருங்க.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!