நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டேஸ்டியான பொடி மீன் வறுவல்... இப்படி செய்து பாருங்க ஓட்டல் சுவையையும் மிஞ்சிடும்!

 மீனை குழம்பு வைத்து சாப்பிட்டாலும் அதை வறுவல் செய்து சாப்பிடுவது தனிச் சுவைதான்.

பெரும்பாலும் மீன் குழம்பு, மீன் பொரியல் மட்டுமே சாப்பிட்டு நிறைய பேருக்கு அலுத்துப் போயிருக்கும்.

அந்த வகையில் குட்டி குட்டியாக இருக்கும் பொடி மீனை வைத்து வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.


தேவையான பொருட்கள்


  1. நெத்திலி மீன் – அரை கிலோ
  2. மிளகாய் தூள் – 25 கிராம்
  3. மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  4. மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
  5. சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
  6. உப்பு – தேவைகேற்ப
  7. ஓமம் – கால் டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  9. பூண்டு – ஐந்து பல் (நசுக்கியது)
  10. தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
  11. சோல மாவு – 25 கிராம்
  12. அரிசி மாவு – 25 கிராம்
  13. முட்டை வெள்ளை கரு – அரை முட்டை 

செய்முறை


ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு, அதில் சோல மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.


பின், குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான பொடி மீன் வறுவல் ரெடி.

இதை நெத்திலி மீன் வறுவல் என்றும் கூறலாம்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!