நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் அசிங்கமான நாய் எது..? பார்வையாளர்களை கவர்ந்த வினோத போட்டி!

அந்த கருப்பு நிற நாய், நடுவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களிடமும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெடாலுமாவில் உலகின் மிக அசிங்கமான நாய்க்கான போட்டி நடைபெற்றது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்த போட்டியில் மிஸ்டர் ஹேப்பி பேஸ் என்ற பெயர் கொண்ட நாய் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச் சென்றது.

 வளைந்த தலை, முடியின்றி, பருக்கள் நிறைந்த உடல், மோசமான மூச்சிரைப்புடன் இருந்த அந்த கருப்பு நிற நாய், நடுவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களிடமும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது. 

உலகின் அசிங்கமான நாயை வைத்திருப்பதாக நினைக்கவில்லை என்றும் உலகின் அன்பான நாயை தான் வளர்த்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நாயின் உரிமையாளரான ஜெனெடா பெனாலி. 

அந்த நாயின் உரிமயாளருக்கு பரிசுத் தொகையாக 1500 டாலர்கள் கிடைத்துள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!