Posts

Showing posts from July, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Weight Control Tips: உடல் எடையை குறைக்க 5 நிமிட உடற்பயிற்சி...

Image
 How To Burn Belly Fat: அனைத்து வயதினரும் எடை அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் தற்போதைய பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, நம்மால் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. ஆனால் இந்த 5 நிமிட உடற்பயிற்சி உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.   உடல் எடையை குறைக்க குறிப்புகள் தொப்பையை வேகமாக குறைக்க சிறந்த வழி தொப்பையைக் குறைக்க புதிய உடற்பயிற்சி. உடல் எடை அதிகரிப்பதால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள், ஆனால் நேரமின்மையால் ஜிம்மில் உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயன் தரும். ஆம் எங்களிடம் ஒரு உடற்பயிற்சி இருக்கிறது, இதை நீங்கள் தினமும் 5 நிமிடம் செய்வதன் மூலம் உங்கள் எடையை வேகமாக குறைக்கலாம், இதற்காக நீங்கள் ஜிம்மிற்கு செல்லவோ அல்லது கடுமையான டயட்டை கடைபிடிக்கவோ தேவையில்லை. எது எப்படிப்பட்ட உடற்பயிற்சி என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். இந்த உடற்பயிற்சி உங்கள் உடலின் முழு கொழுப்பையும் குறைக்க உதவும் சில உடற்பயிற்சிகள் நம் உடலின் சில பகுதிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், ஆனால் இங்கே நாங்கள் குறிப்பிட உள்ள சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், உங்கள் உடலின் சில பகுத

8 Shape Walking : எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும் மாயங்கள்...

Image
  8 Shape Walking : எட்டு வடிவ நடைபாதையின் அடிப்படை ‘வர்ம மருத்துவம்’ என் சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கம். வர்மப் புள்ளிகளை மருத்துவ முறைப்படி தூண்டுவதன் மூலம், பல்வேறு நோய்களைக் கட்டுக்குள் வைக்கலாம். கூழாங்கற்களால் அமைக்கப்பட்ட எட்டு வடிவ நடைபாதையில் நடப்பதன் மூலம், உள்ளங்காலில் உள்ள வர்ம ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படும். ஆரோக்கியத்துக்கு முதன்மையானது நடைபயிற்சி மட்டும் தான் என்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தால், அதனை ஒரு பயிற்சியாக அல்லாமல் அன்றாடம் செய்யும் வேலையை போல் கடைபிடித்தார்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நடந்து செல்வது, கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவதோடு, பிரகாரத்தை சுற்றி வருவது என அதனை அன்றாட பணியாக நடை பயிற்சியை கடை பிடித்தார்கள். நாம் ஆனால், நடக்கும் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு கூட வாகனங்களில் செல்லும் அளவிற்கு சோம்பேறியாகிவிட்டோம்.  உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடுவதுடன் கூடவே, சரியான அளவான உடலுழைப்பு, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதில், பயிற்சியை பொறுத்தவரை, நடை பயிற்சி என்பது அனைவரும் பின்பற்றக் கூ

வறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா? இதோ அசத்தலான டிப்ஸ்......

Image
 பொதுவாக வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். இதனை தக்க சமயத்தில் கவனிக்கத் தவறிவிட்டால், சருமம் தொடர்பாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில் வறண்ட சருமத்தை பாதுகாத்து, அழகான தோற்றத்தை பெற சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.   காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் தேய்த்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும். இயற்கையான முறையில் சருமம் புத்துயிர் பெற இது உதவுகிறது. க்ரீன் டீயை கொதிக்க வைக்கவும். அதில் 1 ஸ்பூன் டீயை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். நன்றாக கலந்து கொண்டு, தேனை சேர்க்கவும். ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை தேனுக்கு உண்டு. இந்த ஸ்கரப்பை முகத்தில் தடவவும். சில நிமிடங்கள் நன்றாக முகத்தை தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வெதுவெதுப்பான நீரை முகத

உலகின் முதல் Crypto Smartphone Solana Saga - என்ன வசதிகள், எப்போது கிடைக்கும்?

Image
 ஆப்பிள், கூகுள், இன்டெல் போன்ற பிரமாண்ட டெக்னாலஜி நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டிங் சாதனங்களைக் கட்டமைத்துக் கொடுத்த அனுபவம் கொண்ட OSOM என்கிற நிறுவனமே, சொலானா சாகா ஸ்மார்ட்ஃபோனை வடிவமைத்து உற்பத்தி செய்யவிருக்கிறார்கள் என சொலானா தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது. செல்ஃபோன் காலம் மலையேறிவிட்டது, இது ஸ்மார்ட்ஃபோன் யுகம் என பூமர் அங்கிள், ஆன்ட்டிகள் அதை முழுமையாகக் கற்றுக் கொள்வதற்குள், கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோன்கள் களமிறங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சொலானா சாகா உலகின் முதல் கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோன் என மனி கன்ட்ரோல் வலைதளம் குறிப்பிட்டுள்ளது. அதென்ன கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோன்..? இதற்கும் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் என்ன வித்தியாசம்? இது எப்போது சந்தையில் கிடைக்கத் தொடங்கும்? வாருங்கள் பார்ப்போம். சொலானா என்கிற பிளாக்செயின் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான சொலானா மொபைல் வழியாக 'சாகா' என்கிற முதல் கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோனை கடந்த 2022 ஜூனில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் வைத்து அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்ஃபோன் சொலானா பிளாக்செயினோடு இயைந்து வேலை பார்க்கும்

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது.....

Image
 எப்படியிருந்தாலும், நள்ளிரவில் தூக்கத்திற்கான தீர்வுகளைத் தேடுவதன் வலி அனைவருக்குமே புரியும். காரணமும் தெரியாமல் தீர்வும் தெரியாமல் தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் பலர். சோர்வாக இருந்தாலும் தூக்கம் வரவில்லையே என்ற வருத்தம் எப்போதாவது உங்களுக்கு வருவது உண்டா? அல்லது தினமும் தூக்கம் வராமல் திரும்பித் திரும்பி படுக்கும் நபரா? அமைதியற்ற தூக்கத்தால் அவதிப்படுபவரா? எப்படியிருந்தாலும், நள்ளிரவில் தூக்கத்திற்கான தீர்வுகளைத் தேடுவதன் வலி அனைவருக்குமே புரியும். காரணமும் தெரியாமல் தீர்வும் தெரியாமல் தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் பலர். அனைவருக்கும் பொருந்தக்கூடிய தீர்வு ஒன்றே ஒன்று என உலகில் இல்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் தங்களுக்குத் தேவையான சில வழிகளைக் கண்டுபிடித்துத் தங்கள் வாழ்வில் பின்பற்றுகிறார்கள். சீனா இளஞ்சூடான நீரில் கால்களை மூழ்கி, சிறிது நேரம் வைத்திருக்க மனம், உடல் ரிலாக்ஸாகும். தூக்கம் வரும். பாத் டப் அல்லது குளியல் டப்பில் இளஞ்சூடான நீரை நிரப்பிக் கொள்ளவும். எப்சாம் உப்பு லாவண்டர் எண்ணெய் அல்லது ரோஸ் எண்ணெய் பழத்தோல்கள் மூலிகைகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை நீரில் போட்டுக்

35 கிலோ மலைப் பாம்பு வறுவல்… கேரளா யூடியூபரின் வேற லெவல் அதிர்ச்சி குக்கிங் வீடியோ!

Image
 கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்த குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்து குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதையே இந்தியாவில் செய்திருந்தால் இன்னேரம் சிறையில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் வன விலங்குகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. யூடியூபில் அரசியல், சினிமா வீடியோக்களைவிட சமையல் வீடியோக்கள்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதே போல, குக்கிங் வீடியோக்களை வெளியிடும் யூடியூபகர்கள் பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதனால், குக்கிங் வீடியோ வெளியிடுபவர்கள் விதவிதமான உணவை சமைத்து வீடியோ பதிவேற்றி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார்கள். அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் விளாக்கர் ஃபிரோஸ் சுட்டிபாரா ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு குக்கிங் வீடியோ வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். குக்கிங் வீடியோக்களை வெளியிடும் பிரபல

என்னையும் சாதாரண மனிதன் போல் மதியுங்கள் - வித்தியாச முயற்சியால் வேதனைப்படும் இளைஞர்....

Image
 இப்படி தனக்குப் பிடித்தவாறு உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்திவந்த அந்தோனி படும் துயரங்களும், பிரச்சனைகளும் ஏராளம் இருக்கிறதாம். நானும் சாதாரண மனிதன் தான்.. என்னையும் கொஞ்சம் மதியுங்கள்.. எனக்கும் வேலைவாய்ப்பு வழங்குங்கள் என உருக்கத்துடன் கூறுகிறார் கருப்பு வேற்று கிரக வாசியாக மாறிய பிரான்ஸை சேர்ந்த அந்தோனி லோஃப்ரெடோ என்ற 34 வயதான இளைஞர். நம்மில் பலர் ஏதாவது புதுமையான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதிலும் மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக உடல் முழுவதும் பச்சைகுத்துவது, ஹேர் ஸ்டைலை மாற்றுவது, வித்தியாசமான உடை அணிவது என்ற தங்களுக்குப் பிடித்தாற்போல் பலவற்றையும் மாற்றிக்கொள்வார்கள். இது போன்ற மனநிலையிலிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 34 வயதான அந்தோனி லோஃப்ரெடோ என்ற இளைஞர், சினிமா கதாபாத்திரத்தில் வரக்கூடிய வேற்று கிரக வாசியாகத் தன்னை கற்பனை செய்துகொண்டதோடு உடலில் பல மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஆரோக்கியமாக இருந்த உடலைத் தீவிரமான அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தி மாற்றியுள்ளார். குறிப்பாக அந்தோனி லோஃப்ரெடோ தன்னுடைய இடது க

உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அரிதான பிங்க் நிற வைரம்; விலை எவ்வளவு தெரியுமா?

Image
 கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த வைரங்களில் மிகவும் விலை மதிப்புள்ள வைர தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் அதிக விலைக்கு ஏலம் போகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வைர சுரங்களில் அவ்வப்போது அற்புதமான மற்றும் விலைமதிக்கத் தக்க வைரங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அங்கோலாவில் உள்ள வைர சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிங்க் நிற வைரமானது, இதுவரை கிடைத்த வைரங்களிலே மிகவும் விலை உயர்ந்தது என்றும், இந்திய மதிப்பில் சுமார் 550 கோடி ரூபாய் வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவின் அங்கோலாவில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் அரிய வகை பிங்க் நிற வைரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரியது என ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளி லுகாபா டயமண்ட் கோ தெரிவித்துள்ளார். 170 காரட் உள்ள இந்த பிங்க் வைரம், ‘தி லுலோ ரோஸ்’ என அழைக்கப்படுகிறது. நாட்டின் வைரங்கள் நிறைந்த வடகிழக்கில் உள்ள லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரம் அங்கோலா அரசுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. டைமண்ட் முதலீட்டு நிறுவனமான லுகாபா வெளியிட

பழைய சோறு, ஜூஸ் இதெல்லாம் கூடாது... உடல் எடையை குறைக்க டாக்டர் கொடுத்த அடடே டயட் டிப்ஸ்..!

Image
 நெட்டிசன் ஒருவர் அண்மையில் மருத்துவரை சந்தித்தபோது, தனக்கு கிடைத்த புதுமையான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். உடல் எடை குறைப்புக்கு அந்த மருத்துவர் போட்ட கண்டிஷன்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன. உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகிய இரண்டும் தான் இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினையாக இருக்கிறது. உடலை கட்டுக்கோப்புடன் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வெறும் கனவாகவே கடந்து போகிறது. அதே சமயம், பலர் மனம் தளராமல் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் உடற்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். இன்னும் சிலர் உணவுக் கட்டுப்பாடு மூலமாக உடல் எடையை குறைக்க முயற்சி எடுக்கின்றனர். சொந்த முயற்சிகள் பலன் தராத நிலையில், ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் போன்றவர்களை அணுகி, ஆலோசனை பெற்று அதன்படி புதுமையான முயற்சிகளை மேற்கொள்பவர்களும் உண்டு. அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் அண்மையில் மருத்துவரை சந்தித்தபோது, தனக்கு கிடைத்த புதுமையான அனுபவத்தை சமூ

World Chess Olympiad 2022 | யோசிக்கணும்… நகர்த்தணும்… ஜெயிக்கணும்… செஸ்ஸில் ‘கிராண்ட்மாஸ்டர்’ என்றால் யார்?

Image
 World Chess Olympiad 2022 | கிராண்ட்மாஸ்டர் என்பது ஒரு சதுரங்க வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும். இந்த பட்டம் செஸ்ஸின் மிக உயர்ந்த நிர்வாகக் குழுவான FIDE-ஆல் வழங்கப்படுகிறது. FIDE என்பது சதுரங்க விளையாட்டின் மிக உயர்ந்த அதிகாரமாகும். இது ‘உலக செஸ் கூட்டமைப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. ஜூலை 20, 1924-ல் இந்த FIDE நிறுவப்பட்டது. இது, சதுரங்க விளையாட்டின் தனிநபர் விளையாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான சதுரங்க விதிகளை உருவாக்குவது ஆகும். கிராண்ட்மாஸ்டர் என்றால் என்ன? கிராண்ட்மாஸ்டர் என்பது ஒரு சதுரங்க வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும். இந்த பட்டம் செஸ்ஸின் மிக உயர்ந்த நிர்வாகக் குழுவான FIDE-ஆல் வழங்கப்படுகிறது. கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை ஒருமுறை வென்றால் வாழ்நாள் முழுவதும் தொடரலாம். இருப்பினும், உலக செஸ் கூட்டமைப்பு அதற்கு சில விதிகளை வகுத்துள்ளது. அது, ஒரு வீரர் ஏதேனும் போட்டியில் ஏமாற்றினாலோ மற்றும் ஊழல் செய்தாலோ குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து பட்டத்தை பறிக்கலாம் என்பது ஆகும். இதுவரை, இந்தியா 74 கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் 26 பேர் தம

200-மெகாபிக்சல் கமெராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்!

Image
 200-மெகாபிக்சல் கமெரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் Moto X30 Pro 200 மெகாபிக்சல் பிரதான கமெராவைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டோவின் ஃபிலாக்ஷிப் மொபைலான Moto X30 Pro ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 125W GaN வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும். Moto X30 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12- ல் இயங்கும் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும். Motorola , சமீபத்திய Weibo பதிவில் Moto X30 Pro 200 மெகாபிக்சல் பிரதான கமெராவைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே 200 மெகாபிக்சலுடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் X30 Pro ஸ்மார்ட்போன் 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. Motorola நிறுவனம் சமீபத்தில் Moto X30 Pro -வில் சென்சார்களின் குவிய நீளத்தை உறுதிப்படுத்தியது. சென்சார்கள் 35 மிமீ, 50 மிமீ மற்றும் 85 மிமீ குவிய நீளம் கொண்டிருக்கும். 85 மிமீ லென்ஸ் சிறந்த நெருக்கமான உருவப்பட காட்சிகளுடன் வருவதாகவும், 50 மிமீ லென்ஸ் நிலை

ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்க வேண்டுமா? இதோ சில எளிய டிப்ஸ்!

Image
 சரும பிரச்சனைகளில் உங்கள் அழகை சீர்குலைக்கும் முக்கிய பிரச்சனை முகப்பரு. இந்த பிரச்சனையை பெரும்பாலான மக்கள் சந்திக்கின்றனர். முகப்பரு என்பது இளம் வயதினரிடையே பொதுவானது. இருப்பினும் இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது. முகப்பரு வந்தால் முகத்தில் அழகையே கெடுத்து விடுகின்றது. இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் முகப்பருவை ஓரே இரவில் போக்க கூடிய சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்ப்போம்.     வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முகப்பரு உள்ள இடத்தில் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். பேஸ்ட் அப்ளை செய்யும் முன் ஐஸ் கட்டிகளை பருக்களில் வைத்து தேய்த்த பிறகு அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும். பருக்களும் நீங்கும்.   பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும். எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல

உடலில் உள்ள பல நோய்களை விரட்ட வேண்டுமா? இதோ சில இயற்கை மருத்துவ குறிப்புகள்.....

Image
  உடலில் உள்ள பல நோய்களை விரட்ட சில இயற்கை மருத்துவங்கள் உதவுகின்றது. அவற்றை சரிவர பின்பற்றினால் எளியமுறையில் இதிலிருந்து விடுபடலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.  தினந்தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும். சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம். தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள்பட்ட இருமல், சளி குணமாகும்.. செம்பருத்தி பூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும். ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப்போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன்க் கிடைக்கும

கைகளில் உள்ள சதையை குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய பயிற்சிகள்.....

Image
 நமது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சீராக வைத்துக் கொள்வதற்கென்று தனித்தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது. இதிலும் இன்றைக்கு பலரும் கைகளில் இருக்கும் தசையை குறைக்க முடியாமல் அவஸ்தைப்படுவதுண்டு. இவற்றை கரைக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றினாலே போதும்.   பயிற்சி: 1   கால்களை சற்று அகல விரித்து நில்லுங்கள். இப்போது இரண்டு கைகளையும் உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். ஒரு முறை பக்கவாட்டில் அங்கிருந்து ஆரம்பித்து உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். உங்களுக்கு நேராக கைகளை கொண்டு வரும் போது கைகள் மேலும் கீழுமாக கடந்து செல்ல வேண்டும். அதாவது கத்திரிக்கோல் போல. அதாவது கைகளை எக்ஸ் வடிவத்தில் கொண்டு வந்து மீண்டும் பக்கவாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். கைகளை நன்றாக கொண்டு செல்ல பழகி விட்டால் கால்களையும் கொண்டு செல்லலாம். பயிற்சி: 2 standing arm circles பயிற்சி. இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் நேராக எழுந்து நிக்க வேண்டும். பிறகு தங்கள் கால்களை சற்று விரித்து வைக்க வேண்டும். பின் தங்களுடைய இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நோக்கி தூக்க வேண்டும். பின் கீழ் நோக்கி இடுப்பு கீழ் இறக்க வேண்டும்.

போனில் தேவையற்ற அழைப்புகள் வருகிறதா? பிளாக் செய்ய எளிய வழிகள் இதோ!

Image
 ஐபோன், ஆண்ராய்டு போனில் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மற்றவர்களுடைய நம்பரை பிளாக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். ஆண்ராய்டு போன், ஐபோன், டேப்லெட் என தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. செல்போன் நம்முடைய வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவருகிறது. நம்முடைய போனில் தினமும் பலவிதமான அழைப்புகளுக்கு பதில் சொல்கிறோம். பெற்றோர், உறவினர், நண்பர் தொடர்பு கொள்வர். அதுதவிர்த்து டெலிமார்க்கெட்டிங் அழைப்பு மற்றும் பிற தேவையற்ற அழைப்புகளை தினமும் எதிர்கொள்கிறோம். அந்தவகையில் உங்களுக்கு விருப்பம் இல்லாத தனிநபர் அல்லது மற்ற அழைப்புகளை தவிர்க்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வராதபடி பிளாக் செய்யும் வசதி ஐபோன், ஆண்ராய்டு போனில் உள்ளது. ஐபோனில் நம்பர்   பிளாக் செய்வது எப்படி? முதலில் செட்டிங்ஸில் போன் மெனுவிற்கு செல்ல வேண்டும். Blocked Contacts பகுதியை கிளிக் செய்து உள்ளே போக வேண்டும். “Add New” ஆப்ஷன் கொடுத்து, பிளாக் செய்ய வேண்டிய நம்பரை contacts-இல் இருந்து நேரடியாக செலக்ட் செய்து பிளாக் செய்யலாம். ஐபோனில் unblock செய்வது எப்படி?

மென்மையான, பளபளப்பான தலைமுடிக்கு செம்பருத்தி எண்ணெய்.......

Image
 செம்பருத்தியில் வைட்டமின் ஏ, சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையை மென்மையாக்குவதற்கும் ஒருவரின் தலைமுடிக்கு எண்ணெய் தடவுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள்’ முடியில் உள்ள இழந்த லிப்பிட்களை மாற்றுகிறது, இது முனைகளை பிளவுபடுத்துவதற்கான முக்கிய காரணியாகும். எண்ணெய் கியூட்டிக்கிளை அடைத்து முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். ஆனால் சந்தையில், பலவிதமான எண்ணெய்களை வாங்குவதற்குப் பதிலாக, சுத்தமான தேங்காய் எண்ணெயில் சில ஆரோக்கியமான பொருட்களைக் கலந்து, அனைத்து நன்மைகளையும் பெறலாம். அவை உலர்ந்த உச்சந்தலையில் ஈரப்பதத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் கூந்தலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஊட்டமளிக்கிறது. உங்கள் மந்தமான கூந்தலை உயிர்ப்பிக்க நீங்களே தயார் செய்யக்கூடிய எண்ணெய் ரெசிபி இதோ! செம்பருத்தி எண்ணெய் செம்பருத்தியில் வைட்டமின் ஏ, சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, முடி

காப்பர் தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது.......

Image
 எடை இழப்புக்கு உதவுவது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை – காப்பர் நீரின் பல நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள் . முழுமையான நல்வாழ்வைப் பேணுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இன்றியமையாதது. பொதுவாக அறியப்பட்டபடி, உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது, சாதாரண உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், முதுகுத் தண்டு மற்றும் பிற திசுக்களைப் பாதுகாக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் தொடர்ந்து தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமானது. ஆனால் காப்பர் பாத்திரங்களில் சேமிக்கப்படும் நீரிலிருந்து அதிக ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி காப்பர் நீரை ஏன் குடிக்கத் தொடங்க வேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களைப் பகிர்ந்துள்ளார். பாருங்கள். தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது பலர் தங்கள் உணவில் போதுமான அளவு தாமிரம் சேர்ப்பதில்லை, இது தைராய்டு சுரப்பிகளின் செயலிழப்பு காரணமாக, தைராய்டு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. காப்பர் நீர் தைராய்டு சுரப்பியின் செயல்திறனை சமன் செய்கிறது. வீக்கத்தை குணப்படுத்துகிறது கீல்வாதம் அல்லது மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள்

நீண்ட நேரம் இரவில் கண் விழிப்பவரா நீங்கள்? - அப்போ அவசியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்....

Image
 மனிதர்கள் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் துாங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மன நல கோளாறுகள்,உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். நீண்ட நேரம் இரவில் கண் விழித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.  மூட் ஸ்விங்ஸ் மனிதம் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் துாங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மன நிலை மாற்றங்கள் ஏற்படும் குறிப்பாக எரிச்சல், கோபம், சோர்வு, கவன சிதறல் உள்ளிட்டவை ஏற்படும். மன நல பாதிப்பு  சரியான துாக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும்.சரியாக துாங்கவில்லை என்றால் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு துாக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்.ஒருவர் துாங்கும் போது தான் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று - எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது. அதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட துாக்

தீவில் ஒடும் தீப்பிழம்பு ,வைரலாகும் வீடியோ - எங்கு தெரியுமா ?

Image
 ஹவாய் தீவில் உள்ள கிலவியா எரிமலை வெடித்ததில், தீ குழம்புகள் ஆறுபோல் ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்ப்பதற்கு தங்கம் உருகி ஓடுவதைப் போல் இருக்கிறது. எரிமலை தீ பிழம்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், சுவரஸ்யமான மற்றும் வித்தியசமான வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைக்கு கையடக்க பொருடகளாக மாறிவிட்ட நிலையில், உலகின் எட்டு திசைகளின் எல்லை முழுவதும் பயணிக்கும் பயணிகள் தாங்கள் காணும் இயற்கை அழகினை தான் கண்டு ரசிப்பதோடு அதனை தனது மொபைல் போன் மற்றும் கொண்டு செல்லும் கேமராவில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக பலர் கொண்டுள்ளனர். இதில், சமீபத்தில் வைரலாகிவரும் ஒரு வீடியோ காண்போர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஹவாய் தீவில் உள்ள கிலவியா எரிமலை வெடித்து வேகமாக ஓடும் எரிமலைக் குழம்பின் வீடியோ மிகவும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் வீடியோ மிகவும் அண்மையில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், வேகமாக ஓடும் எரிமலைக் குழம்பு சிதறிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கையில், தங்கம் உருகி ஓடுவதைப் போல் இருக்க

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி?

Image
  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு சுறா புட்டு. அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதால் உடலுக்கு நன்மை அளிக்கிறது. தேவையான பொருட்கள் சுறா மீன் - 1/2 கிலோ வெங்காயம் - 4 பூண்டு - 20 பல் பெரியது இஞ்சி - 1 பெரிய துண்டு பச்சை மிளகாய் - 3 மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மல்லி தூள் - ½ ஸ்பூன் மிளகு தூள் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு கடுகு - ½ ஸ்பூன்   செய்முறை விளக்கம் முதலில் பொடி பொடியாக வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை நறுக்கிகொள்ளவும். அடுத்து, சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும். பின், சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும். தொடர்ந்து, மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!