நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இழந்த பொழிவை திரும்ப பெற வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்......

 பொதுவாக வெயில் காலத்தில் அதிகப்படியான வியர்வை மற்றும் ஈரப்பதமின்மை போன்ற காரணங்களால் கட்டி மற்றும் தசை சுருக்கம் போன்ற பிரச்சினைகள் வருவது இயல்பானது தான். 


இதனால் முகம் பொழிவிழந்து காணப்படும். அதற்கான பலர் அதிகப்பணத்தை செலவழித்து கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் இது தற்காலிகம் தான்.

நீங்கள் இழந்த பொழிவை திரும்ப பெற வீட்டில் உள்ள சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

குறிப்பாக, இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் இதில் பக்க விளைவுகள் கிடையாது. தற்போது இதனை எப்படி தயாரிப்பது? எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். 


தேவையானவை 

 கற்றாழை ஜெல் - 2 டீ ஸ்பூன்

வெள்ளரிக்காய் 

செய்முறை 

2 டீ ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து, அதனுடன் அரைத்து வைத்த வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளவும். 

இதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து, லேசாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

ஒரு வாரத்திற்கு தேவையான பேஸ்ட்-ஐ ஒரே நாளில் தயார் செய்து, அதை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் சமயங்களில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பலன்கள் 

 பருவ கால மாற்றங்களால் ஏற்படும் எண்ணெய் வழிந்த முகம் அல்லது வறண்ட முகம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம்.  

 இது உங்கள் சருமத்தை பொழிவாக மாற்றும். 

 கன்னத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து நல்ல தோற்றத்தை கொடுக்கும்.



ALSO READ : வயிற்று கொழுப்பை அதிவேகமாக குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை மறக்கமால் செய்து வந்தாலே போதும்......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!