நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வில்வ இலை டீ போட்டு குடிச்சு பாருங்க! இந்த நோய்கள் உங்களை கிட்ட கூட நெருங்காதாம்!

 பொதுவாக வில்வ மரத்தின் இலை, காய், பழம், வேர், பூ என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

தசை வளர்ச்சிக்கு தேவையான பெக்டின், இரும்புச்சத்து, அமிலச்சத்து ஆகியவை வில்வத்தில் உள்ளது.

இதில் டீ போட்டு குடிப்பதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 


  • முதலில் 7 வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி அந்த தேநீரை தினமும் 3 முறை பருக வேண்டும்.  

  • முதலில் வில்வ இலைகளை உலர வைத்து கொள்ளுங்கள். மஞ்சள் கிழங்கு மற்றும் அரிசி இவற்றை இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக காய வைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சரும பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படும்.  

  • 110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ வேரை போட்டு கொதிக்க விடவும். இது காய்ச்சல் மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.  

பக்க விளைவுகள்


  • கருவுற்ற பெண்கள் இந்த வில்வ இலைகளை சாப்பிடக் கூடாது.

  • இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீங்கள் ஏற்கனவே மருந்து எடுத்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்துவது நல்லது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!