நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழகைக் குறைக்கும் தொப்பை! இதை சாப்பிட்டால் போதும் கிடுகிடுவென குறைஞ்சிடுமாம்.......

 பொதுவாக இன்றைய இளம் பெண்கள் தொப்பை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

கடைகளில் கிடைக்கும் கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிகம் கோதுமை மாவு சேர்ந்த பொருட்கள் போன்ற பலவற்றை கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடுவதனால் உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியின் தங்கி உடலை பருமனாக்குக்கின்றன.

அவற்றை அப்படியே விடும்போது பல தீராத நோய்களை தருகின்றன. இதனை எளியமுறையில் தீர்க்க வேண்டும் என்றால் ஒரு உணவுகள் பெரிதும் உதவுகின்றது.


அதிலும் ஒரு பழங்களும் துணைபுரிகின்றது. அதில் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

தற்போது அதனை எப்படி சாப்பிட்டால் என்ன தொப்பையை குறைக்க முடியும் என பார்ப்போம்.


அன்னாசி பழம் செய்யும் அற்புதம்

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள கொழுப்புச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சுரைக்காய்

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள். கொழுப்பு கரையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சமைத்து சாப்பிடுங்கள். கொழுப்பை கரைக்கும். உடலில் தனியிருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றும்.   

வயிற்றுச் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.



ALSO READ : வாழைத்தண்டு சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!