நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குண்டு துளைக்காத ஐபோன்..உக்ரைன் வீரரின் உயிரைக் காத்த அதிசயம்!

 உக்ரைன் இராணுவ வீரரைத் தாக்க வந்த தோட்டா அவர் பயன்படுத்தி வந்த ஐபோனில் சிக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


உலகில் உள்ள நாடுகள் உற்று நோக்கும் விஷயமாக ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளது. பல நாட்கள் ஆகியும் இந்த போர் இன்னும் முடிவுபெறாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ, நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் உக்ரைன் இராணுவ வீரரைத் தாக்க வந்த தோட்டா அவர் பயன்படுத்தி வந்த ஐபோனில் சிக்கியுள்ளது. இதனால் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இதைப் பகிர்ந்து அவர், “நம் வீரரின் உயிரை ஒரு ஐபோன் காப்பாற்றியுள்ளது” என எழுதியுள்ளார். பலரும் அதிகமாக ஷேர் செய்து வரும் இந்த வீடியோவை இதுவரை 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவிற்கு ஒரு பார்வையாளர், “ஐபோனை நான் வாங்குவதற்கு எனக்கு மேலும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது” என எழுதியுள்ளார். மற்றொருவர், “ஐபோன் தோட்டவை நன்றாகத் தாங்குகிறது, ஆனால் கீழே போட்டால் தான் உடைகிறது” என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “இதைத் தயாரிக்கும் பொருட்களை வைத்து ஏன் காவலர்களுக்கு புல்லட் புரூப் பொருட்களைத் தயாரிக்கக் கூடாது” எனக் கேட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய தாக்குதலில், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 13 பேர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு முன் நடந்த தாக்குதலில், 23 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த ரஷ்யா- உக்ரைன் போர், முடிவு பெறாமல் நடைபெற்று வருகிறது.


ALSO READ : பலரை குழப்பிய புகைப்படம்... இந்த திருமண உடையில் மறைந்திருக்கும் உருவம் என்ன தெரியுமா.?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!